கோவை: இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிறுவனருக்கு சொந்தமான வணிக வளாகத்தில் நடைபெற்ற தாக்குதல் மற்றும் சென்னை புளியந்தோப்பு பகுதியில் செய்தி சேகரிக்க சென்ற நிருபர்கள் மீதான தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி(தமிழகம்) தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கபட்டது.
கோவை: இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிறுவனருக்கு சொந்தமான வணிக வளாகத்தில் நடைபெற்ற தாக்குதல் மற்றும் சென்னை புளியந்தோப்பு பகுதியில் செய்தி சேகரிக்க சென்ற நிருபர்கள் மீதான தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி(தமிழகம்) தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கபட்டது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் சம்பத் கூறுகையில், யாதவ மகாசபையின் தேசிய தலைவராக உள்ள வின் தொலைக்காட்சி உரிமையாளர், இந்திய குடியுரிமை சட்டம் குறித்து செய்திகள் வெளியிட்டு பொது கூட்டங்களில் பேசி வருகிறார். இதனை கண்டித்து மறைமுக மிரட்டல் விடுத்தவர்கள் சென்னையில் உள்ள வணிக வளாகத்தில் தாக்குதல் நடத்தி உள்ளதாகவும் புளியந்தோப்பு பகுதியில் செய்தி சேகரிக்க சென்ற நிருபர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளதாகவும் மேலும், தொடர்ந்து மறைமுகமாக மிரட்டல் விடுத்து வருவதாக தெரிவித்தார்.
மேலும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் எனவும் இந்த இரு சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல ஆனையரிடம் புகார் மனு அளித்தனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் சம்பத் கூறுகையில், யாதவ மகாசபையின் தேசிய தலைவராக உள்ள வின் தொலைக்காட்சி உரிமையாளர், இந்திய குடியுரிமை சட்டம் குறித்து செய்திகள் வெளியிட்டு பொது கூட்டங்களில் பேசி வருகிறார். இதனை கண்டித்து மறைமுக மிரட்டல் விடுத்தவர்கள் சென்னையில் உள்ள வணிக வளாகத்தில் தாக்குதல் நடத்தி உள்ளதாகவும் புளியந்தோப்பு பகுதியில் செய்தி சேகரிக்க சென்ற நிருபர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளதாகவும் மேலும், தொடர்ந்து மறைமுகமாக மிரட்டல் விடுத்து வருவதாக தெரிவித்தார்.
மேலும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் எனவும் இந்த இரு சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல ஆனையரிடம் புகார் மனு அளித்தனர்.