கோவையில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தி மாநகரம் முழுவதும் காவல்துறையினர் துப்பாக்கி ஏந்தியபடி அணிவகுப்பு!

கோவை: கோவை மாவட்டத்தில் இந்து முன்னணியினர் மற்றும் அனைத்து இஸ்லாமிய கூட்டியக்கத்தின் சார்பில் நடைபெற்று வரும் கடையடைப்பில் சட்டம் ஒழுங்கை உறுதிப்படுத்தி கோவை மாநகர காவல்துறையினர் மாநகரம் முழுவதும் துப்பாக்கி ஏந்தியபடி அணிவகுப்பு மேற்கொண்டனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் இந்து முன்னணியினர் மற்றும் அனைத்து இஸ்லாமிய கூட்டியக்கத்தின் சார்பில் நடைபெற்று வரும் கடையடைப்பில் சட்டம் ஒழுங்கை உறுதிப்படுத்தி கோவை மாநகர காவல்துறையினர் மாநகரம் முழுவதும் துப்பாக்கி ஏந்தியபடி அணிவகுப்பு மேற்கொண்டனர்.

இந்து முன்னணி பிரமுகர் தாக்கப்பட்டதை கண்டித்து இந்து முன்னணி சார்பில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல, பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்களை கண்டித்து அனைத்து ஜமாத் இஸ்லாமிய கூட்டியக்கத்தின் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் கோவை மாநகரம் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.

இந்த நிலையில், கோவை மாநகர காவல் துறையினர் பொதுமக்கள் யாரும் அஞ்ச வேண்டாம், மாநகர காவல்துறை சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தயார் நிலையில் உள்ளது என்பதை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தும் விதமாக மாநகர காவல்துறை சார்பில் மாநகரம் முழுவதும் அணிவகுப்புகள் நடைபெற்று வருகிறது.



இதில் காந்திபுரம் பகுதியில் மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் தலைமையில் துணை ஆணையாளர் செல்வகுமார் மேற்பார்வையில் நூற்றுக்கணக்கான போலீசார் துப்பாக்கி ஏந்தியபடி அணிவகுப்பு மேற்கொண்டனர்.



அதேபோல, குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் தலைமையிலும், மாநகர மேற்கு பகுதியில் துணை ஆணையாளர் உமா தலைமையிலும், மாநகர கிழக்கு பகுதியில் துணை ஆணையாளர் முத்தரசு தலைமையிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் அதிவிரைவு படையினர் அணிவகுப்பு மேற்கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...