நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காட்டு யானை தாக்கியதில் கூலி தொழிலாளி படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காட்டு யானை தாக்கியதில் கூலி தொழிலாளி படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் ஏழுமரம் பனியர் காலனியை சேர்ந்தவர் மாணிக்கம் (50). இவர் வழக்கம் போல ஏழுமரம் காப்பி தோட்டத்தில் இன்று காலை 7.30 மணிக்கு சில்வர் கிளவுட் எஸ்டேட்டில் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது, அங்குள்ள புதர் மறைவில் இருந்து திடீரென வெளியே வந்த காட்டு யானை ஒன்று மாணிக்கத்தின் வயிற்றுப்பதியில் தாக்கியுள்ளது.

காட்டு யானை தாக்கியதில் மாணிக்கம் படுகாயம் அடைந்த நிலையில், அவரது குடல் வெளியே வந்துள்ளது. இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை செய்தனர். மேலும், தொடர் சிகிச்சைக்காக கேளிகட் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.