கோவை: திரைப்படங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைக்கு காட்சிகளின் போது சட்டரீதியான எச்சரிக்கையை காண்பிக்க இந்திய அரசு உடனடியாக ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும் என கோயம்புத்தூர் மனித உரிமைகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கோவை: திரைப்படங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைக்கு காட்சிகளின் போது சட்டரீதியான எச்சரிக்கையை காண்பிக்க இந்திய அரசு உடனடியாக ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும் என கோயம்புத்தூர் மனித உரிமைகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளின் போது, 'புகைப்பிடித்தல் உடல்நலத்திற்கு தீங்கானது' என்ற எச்சரிக்கை வாசகமும், மது அருந்தும் காட்சிகளின் போது 'மது அருந்துதல் உடல்நலத்திற்கு தீங்கானது' என்று எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற வேண்டும் என தணிக்கை குழு நிபந்தனை விதித்துள்ளது.
இது குறித்து கோயம்புத்தூர் மனித உரிமைகள் அமைப்பு அனுப்பிய கோரிக்கையில் தெரிவித்திருப்பதாவது ;-
தேசிய பெண்கள் ஆணையம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்கான மத்திய அமைச்சகம் ஆகியவை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான திரைப்பட வன்முறை காட்சிகள் வரும்போது , “இது சட்டத்திற்கும் சமூகத்திற்கும் எதிரான செயல்” என்ற அறிவிப்பினை திரையிடுமாறு கோரியுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளை மீறும் சம்பவங்கள் அதிக எண்ணிக்கையில் நடைபெறும் நாடுகளில் இந்தியாவும் மோசமான இடத்தில் உள்ளது என ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை சொல்லியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஊடகங்களில் குறிப்பாக, திரைப்படங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை காட்சிகளின் தாக்கம், இந்த சட்டவிரோத மற்றும் நியாயமற்ற சமூக தீமையை ஊக்குவிக்கும். பார்வையாளர்களின் மனதை இவை பெரிதும் பாதிக்கின்றன. எனவே, காட்சிகளின் போது புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கத்திற்கு எதிரான சட்டரீதியான எச்சரிக்கைகள் திரையிடப்படுவதைப்போல, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை காட்சிகளின்போது, சட்டரீதியான எச்சரிக்கையை காண்பிக்க இந்திய அரசு உடனடியாக ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும். இதனால், பார்வையாளர்களிடம் பெண்களுக்கு எதிரான எண்ணம் உருவாவதைத் தடுக்க இது ஒரு சிறிய படியாக இருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளின் போது, 'புகைப்பிடித்தல் உடல்நலத்திற்கு தீங்கானது' என்ற எச்சரிக்கை வாசகமும், மது அருந்தும் காட்சிகளின் போது 'மது அருந்துதல் உடல்நலத்திற்கு தீங்கானது' என்று எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற வேண்டும் என தணிக்கை குழு நிபந்தனை விதித்துள்ளது.
இது குறித்து கோயம்புத்தூர் மனித உரிமைகள் அமைப்பு அனுப்பிய கோரிக்கையில் தெரிவித்திருப்பதாவது ;-
தேசிய பெண்கள் ஆணையம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்கான மத்திய அமைச்சகம் ஆகியவை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான திரைப்பட வன்முறை காட்சிகள் வரும்போது , “இது சட்டத்திற்கும் சமூகத்திற்கும் எதிரான செயல்” என்ற அறிவிப்பினை திரையிடுமாறு கோரியுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளை மீறும் சம்பவங்கள் அதிக எண்ணிக்கையில் நடைபெறும் நாடுகளில் இந்தியாவும் மோசமான இடத்தில் உள்ளது என ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை சொல்லியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஊடகங்களில் குறிப்பாக, திரைப்படங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை காட்சிகளின் தாக்கம், இந்த சட்டவிரோத மற்றும் நியாயமற்ற சமூக தீமையை ஊக்குவிக்கும். பார்வையாளர்களின் மனதை இவை பெரிதும் பாதிக்கின்றன. எனவே, காட்சிகளின் போது புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கத்திற்கு எதிரான சட்டரீதியான எச்சரிக்கைகள் திரையிடப்படுவதைப்போல, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை காட்சிகளின்போது, சட்டரீதியான எச்சரிக்கையை காண்பிக்க இந்திய அரசு உடனடியாக ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும். இதனால், பார்வையாளர்களிடம் பெண்களுக்கு எதிரான எண்ணம் உருவாவதைத் தடுக்க இது ஒரு சிறிய படியாக இருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.