கோவை: வால்பாறை அரசு மருத்துவமனையில் முதன் முறையாக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவர்களின் வழிகாட்டுதல் படி பவித்ரா மற்றும் நந்தினி ஆகியோருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பெற்றெடுத்து சாதனை படைத்துள்ளனர்.
கோவை: வால்பாறை அரசு மருத்துவமனையில் முதன் முறையாக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவர்களின் வழிகாட்டுதல் படி பவித்ரா மற்றும் நந்தினி ஆகியோருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பெற்றெடுத்து சாதனை படைத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. சுமார் ஒரு லட்சம் பேர் வசிக்கும் வால்பாறையிலுள்ள இந்த மருத்துவமனையில் இரத்த வங்கி உட்பட எவ்வித வசதிகளும் இல்லாததால் வனவிலங்குகளின் தாக்குதல் விபத்தில் காயமடைதல் சம்பவங்களுக்கு 3 மணி நேரம் மலைச்சாலையில் 64 கிலோ மீட்டர் பயணம் செய்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலை உள்ளது.
குறிப்பாக, கர்ப்பிணி பெண்கள் பிரசவத்தில் அறுவை சிகிச்சை தேவைப்படும் போது பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு வந்தனர். இதனால் பல நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டன.

இந்த நிலையில், வால்பாறை அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் வினோத் தலைமையிலான மருத்துவ குழுவினர் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் கிருஷ்ணா, மங்கையற்கரசி, ஜோதிகலா ஆகியோரின் வழிகாட்டுதல் படி பவித்ரா மற்றும் நந்தினி ஆகியோருக்கு வால்பாறை அரசு மருத்துவமனையில் முதன் முறையாக அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பெற்றெடுத்துள்ளனர்.
இக்குழுவில் மருத்துவர்கள் வினோத் M.S, மகேஷ், ஆனந்தி DGO, மஞ்சுளா M.S, முகம்மது சாதிக் MD, சுரேந்திரன் MD மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளனர். இந்த நிகழ்வுக்கு வால்பாறை மக்கள் மருத்துவ குழுவினரை வெகுவாக பாராட்டினர்.