கோவையில் போராட்டத்திற்காக கடைகளை மூட கட்டாயப்படுத்தக் கூடாது - கோவை மாநகர காவல்துறையினர் எச்சரிக்கை

கோவை: கோவையில் இந்து அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய கூட்டியக்கங்கள் கடையடைப்பு போராட்டம் அறிவித்துள்ள நிலையில், கடைகளை மூட வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்தக் கூடாது என கோவை மாநகர காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

கோவை: கோவையில் இந்து அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய கூட்டியக்கங்கள் கடையடைப்பு போராட்டம் அறிவித்துள்ள நிலையில், கடைகளை மூட வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்தக் கூடாது என கோவை மாநகர காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளராக செயல்பட்டு வருபவர் ஆனந்த்(33), இவர் நேற்று முன்தினம் இரவு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு, கோவை நஞ்சுண்டாபுரம் பகுதி வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, பாலத்தின் அருகே மர்ம நபர்கள் சிலர் தாங்கள் கொண்டு வந்திருந்த இரும்பு கம்பியை கொண்டு கடுமையாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த ஆனந்தன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து தகவலறிந்து வந்த இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் கோவை அரசு மருத்துவமனை முன்பு ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பரபரப்பான சூழல் நிலவியதையடுத்து, கோவை மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் மாநகரம் முழுவதும் 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்து முன்னணி பிரமுகர் மீது தாக்குதலை கண்டித்து இன்று (06-03-2020) கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுமென அவ்வமைப்பின் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணி அறிவித்திருந்தார். அதேபோல, இந்து முன்னணி அமைப்பை கண்டித்து இன்று (06-03-2020) அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய கூட்டியக்கங்களின் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்து முன்னணி அமைப்பினர் கடையடைப்பு போராட்டத்தை வரும் சனிக்கிழமைக்கு தேதி மாற்றியுள்ளனர். அதேபோல இஸ்லாமிய அமைப்பினர் தற்காலிகமாக கடையடைப்பு தேதியை மாற்றியுள்ளனர்.

இந்த நிலையில், இஸ்லாமிய கூட்டியக்கங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பொதுமக்கள் யாரையும் கடைகளை மூட கட்டாயப்படுத்த வேண்டாம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...