கோவையில் புகார் அளிக்க வந்தவரை தாக்கிய பெண் தலைமை காவலர் இடமாற்றம்! வைரலாகும் வீடியோ

கோவை: கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பேரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்தவரை பெண் தலைமை காவலர் ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதையடுத்து தலைமை காவலர் இடமாற்றம் செய்யப்பட்டார்.


கோவை: கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பேரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்தவரை பெண் தலைமை காவலர் ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதையடுத்து தலைமை காவலர் இடமாற்றம் செய்யப்பட்டார்.



கோவை மாவட்டத்தில் மகளிர் காவல் நிலையங்களில் புகார் அளிக்க வருபவர்களையும், அவர்களின் உறவினர்களையும் அவமரியாதையாக நடத்துவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.



இதில், குறிப்பாக பேரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பணியாற்றும் பெண் தலைமைக் காவலர் ஒருவர், புகார் அளிக்க வருபவர்களிடம் லஞ்சம் கேட்பதாகவும், கொடுக்க மறுத்தால் தாக்குதல் நடத்துவதாக எழுந்த புகார்கள் சமூக வலைத்தளத்தில் வீடியோக்களாக வெளியானது. மேலும், இந்த வீடியோவில் புகார் அளிக்க வந்த நபரை, அந்த தலைமை காவலர் சரமாரியாக தாக்கி உள்ளே இழுத்துச் செல்லும் காட்சிகளும் இடம் பெற்றிருந்தது.



இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் சிலர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து குற்றச்சாட்டில் சிக்கிய பெண் தலைமை காவலர் கிருஷ்ணவேணி தொண்டாமுத்தூர் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக துணை கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் எனவும் காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...