வால்பாறை அரசு கல்லூரியில் ஆண்டு விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கான மாரத்தான் போட்டி

கோவை: வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறவிருக்கும் ஆண்டு விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது.


கோவை: வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறவிருக்கும் ஆண்டு விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது.



கோவை மாவட்டம் வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தின் முன்புறம் கல்லூரி முதல்வர் முனைவர் முரளீதரன் கொடியசைத்து மாரத்தான் போட்டியை துவக்கி வைத்தார்.

கல்லூரியிலிருந்து புறப்பட்டு காந்தி சிலை வளாகம், தபால் நிலையம், காமராஜ் நகர் வழியாக புதுத்தோட்டம் வரை சென்று திரும்பும் 6 கிலோ மீட்டர் மாரத்தானில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் கார்த்திக் எம்.எஸ்.சி முதலிடமும், கௌதம் பி.காம் இரண்டாமிடத்தையும், சரவணன் பி.காம் மூன்றாமிடத்திலும் வெற்றி பெற்றனர்.



இதே போல், கல்லூரியில் புறப்பட்டு காந்தி சிலை வளாகம் தாலுக்கா அலுவலகம் வழியாக கல்லூரி திரும்பும் 3 கிலோமீட்டர் மாரத்தானில் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் புவனேஸ்வரி பி.காம் முதல் இடத்தையும், அஸ்வினி பி.ஏ இரண்டாமிடத்தையும், அஸ்வினி பி.காம் மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு ஆண்டு விழாவில் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படும். இந்த போட்டியை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்ததோடு ஓடிய மாணவர்களை ஊக்கப்படுத்தினர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...