கோவை: பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட சி.ஐ.டி.யூ உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழுவினர் 52 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை: பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட சி.ஐ.டி.யூ உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழுவினர் 52 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் அமல்படுத்திட வேண்டும், அமைப்பு சாரா நலவாரிய உறுப்பினர்களுக்கு 6000 ஓய்வூதியம் வழங்கிட வேண்டும், ஒப்பந்த ஊழியர்களை நிரந்தர படுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் சிறை நிரப்பு போராட்டம் நடைபெற்றது.

ஒருங்கிணைப்பாளர் லலிதாமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 52 பேர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இரவு நேரங்களில் பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்புடன் போக்குவரத்து வசதி செய்து தர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தனியார் நிறுவனங்களிலும் மகப்பேறு விடுப்பு உத்தரவாத படுத்திட வேண்டும் என வலியுறுத்தி மத்திய மாநில அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இந்த போராட்டத்தில் மாவட்ட தலைவர் பத்மநாபன், மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் அமல்படுத்திட வேண்டும், அமைப்பு சாரா நலவாரிய உறுப்பினர்களுக்கு 6000 ஓய்வூதியம் வழங்கிட வேண்டும், ஒப்பந்த ஊழியர்களை நிரந்தர படுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் சிறை நிரப்பு போராட்டம் நடைபெற்றது.

ஒருங்கிணைப்பாளர் லலிதாமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 52 பேர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இரவு நேரங்களில் பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்புடன் போக்குவரத்து வசதி செய்து தர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தனியார் நிறுவனங்களிலும் மகப்பேறு விடுப்பு உத்தரவாத படுத்திட வேண்டும் என வலியுறுத்தி மத்திய மாநில அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இந்த போராட்டத்தில் மாவட்ட தலைவர் பத்மநாபன், மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.