விவசாயநிலங்களில் பெட்ரோல் குழாய் அமைப்பது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் ; விவசாயிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதம்

திருப்பூர்: திருப்பூரில் விவசாய நிலங்களில் பெட்ரோல் குழாய் அமைப்பதற்கான கருத்துக்கேட்பு கூட்டத்தில், விவசாய சங்க பிரதிநிதிகளை கூட்டத்திற்குள் அனுமதிக்காத காரணத்தால் விவசாயிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்: திருப்பூரில் விவசாய நிலங்களில் பெட்ரோல் குழாய் அமைப்பதற்கான கருத்துக்கேட்பு கூட்டத்தில், விவசாய சங்க பிரதிநிதிகளை கூட்டத்திற்குள் அனுமதிக்காத காரணத்தால் விவசாயிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டத்தில் அழகுமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாரதிய பெட்ரோல் நிறுவனம் சார்பில் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை விவசாய நிலங்களுக்குள் கொண்டு செல்லாமல் நெடுஞ்சாலைகள் ஒரமாக கொண்டு செல்ல விவசாயிகள் வலியுறுத்திவருகின்றனர்.



இந்த நிலையில் பெட்ரோல் குழாய் அமைக்கும் பணிகள் தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் திருப்பூர் தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கருத்துக்கேட்பு கூட்டத்திற்கு 21 விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், விவசாய சங்க பிரதிநிதிகளை கூட்டத்திற்குள் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. 



இதனால் விவசாயிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து விவசாய விளை நிலங்கள் வழியே பெட்ரோல் குழாய் பதிப்பதால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அதிகாரிகள் எழுத்து பூர்வமாக விளக்கம் அளித்தால் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்போம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...