கோவை: ஈஷா ஆரோக்கிய அலை அமைப்பு சார்பில் மார்பகம், கர்ப்பபை தொடர்பான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் மார்ச் 8-ம் தேதி நடைபெற உள்ளது.
கோவை: ஈஷா ஆரோக்கிய அலை அமைப்பு சார்பில் மார்பகம், கர்ப்பபை தொடர்பான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் மார்ச் 8-ம் தேதி நடைபெற உள்ளது.
கிராமப்புற ஏழை மக்களுக்கு தரமான மருத்துவ சேவை அளிக்கும் நோக்கத்தில் ஈஷா இராமப் புத்துணர்வு இயக்கத்தின் ஆரோக்கிய அலை அமைப்பானது, முன்னணி மருத்துவமனைகளுடன் இணைந்து பல்வேறு விதமான இலவச மருத்துவ முகாம்களை கோவை மாவட்டத்தில் மாதந்தோறும் நடத்தி வருகிறது.
அதன்படி, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து மார்பகம் மற்றும் கர்ப்பபை தொடர்பான நோய்களை கண்டறிவதற்கான இலவச பரிசோதனை முகாமை இம்மாதம் நடத்த உள்ளது. இம்முகாம், கோவை ஈஷா யோகா மையம் அருகே உள்ள முட்டத்துயல் பகுதியில் இருக்கும் ஈஷா இராம மருத்துவமனையில் மார்ச் 8-ம் தேதி காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். இதில் 20 வயது முதல் 75 வயது வரை உள்ள பெண்கள் கலந்துகொள்ளலாம். அவர்களுக்கு ஆரம்ப கட்ட பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படும்.
மேலும், புற்றுநோய் தொடர்பான சந்தேகங்களுக்கு மருத்துவ ஆலோசனையும் வழங்கப்படும். கூடுதல் தகவல்களுக்கு 90801 78524, 95242 90388 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
கிராமப்புற ஏழை மக்களுக்கு தரமான மருத்துவ சேவை அளிக்கும் நோக்கத்தில் ஈஷா இராமப் புத்துணர்வு இயக்கத்தின் ஆரோக்கிய அலை அமைப்பானது, முன்னணி மருத்துவமனைகளுடன் இணைந்து பல்வேறு விதமான இலவச மருத்துவ முகாம்களை கோவை மாவட்டத்தில் மாதந்தோறும் நடத்தி வருகிறது.
அதன்படி, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து மார்பகம் மற்றும் கர்ப்பபை தொடர்பான நோய்களை கண்டறிவதற்கான இலவச பரிசோதனை முகாமை இம்மாதம் நடத்த உள்ளது. இம்முகாம், கோவை ஈஷா யோகா மையம் அருகே உள்ள முட்டத்துயல் பகுதியில் இருக்கும் ஈஷா இராம மருத்துவமனையில் மார்ச் 8-ம் தேதி காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். இதில் 20 வயது முதல் 75 வயது வரை உள்ள பெண்கள் கலந்துகொள்ளலாம். அவர்களுக்கு ஆரம்ப கட்ட பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படும்.
மேலும், புற்றுநோய் தொடர்பான சந்தேகங்களுக்கு மருத்துவ ஆலோசனையும் வழங்கப்படும். கூடுதல் தகவல்களுக்கு 90801 78524, 95242 90388 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.