கோவை நரசிபுரம் அருகே காட்டு யானை தாக்கியதில் கூலித் தொழிலாளி பலி

கோவை: கோவை நரசிபுரம் அருகே காட்டு யானை தாக்கியதில் கூலித் தொழிலாளி சம்பவ இடத்தில் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை நரசிபுரம் அருகே காட்டு யானை தாக்கியதில் கூலித் தொழிலாளி சம்பவ இடத்தில் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த வெள்ளருக்கம்பாளையம் பகுதியை சார்ந்தவர் கிட்டுசாமி. கூலித் தொழிலாளியான இவர் நேற்று பணி முடிந்த நிலையில் மது அருந்திவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பியுள்ளார்.



அப்போது, நரசிபுரம் அருகே காட்டுப்பாதை வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த போது புதர் மறைவில் நின்றிருந்த ஒற்றை யானை திடீரென கிட்டுசாமியை தாக்கி தூக்கி வீசியது. இதில் நிலை குலைந்து கீழே விழுந்த அவரை காலால் மிதித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அவர் வந்த இருசக்கர வாகனத்தையும் தாக்கி சேதப்படுத்தியது.

இதனையடுத்து, இன்று அதிகாலை அவ்வழியாக சென்றவர்கள் கிட்டுசாமி உயிரிழந்து கிடப்பதை பார்த்து போளுவாம்பட்டி வனத்துறையினருக்கும், ஆலாந்துறை போலீசாருக்கும் தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கிட்டுசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்ட வனத்துறையினர் யானை தாக்கி கிட்டுசாமி உயிரிழந்ததை உறுதி செய்தனர். மேலும் அரசு வழங்கும் நிவார தொகையான 4 லட்சம் ரூபாயில் இருந்து அவரின் இறுதி சடங்கிற்கு 50 ஆயிரம் ரூபாயை அவரது உறவினர்களிடம் வழங்கினர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், கோடைகாலம் துவங்கியதால் மலைப்பகுதியிலிருந்து காட்டு யானைகள் கிராமங்களை நோக்கி வருவதாகவும் இரவு நேரங்களில் வெளியே நடமாட வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...