கோவை அருகே ஜீப் கவிழ்ந்து விபத்தில் இரண்டு முதியவர்கள் பலி - 5 பேருக்கு தீவிர சிகிச்சை

கோவை: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலையில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் கேரளாவை சேர்ந்த 2 மூதாட்டிகள் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலையில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் கேரளாவை சேர்ந்த 2 மூதாட்டிகள் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள பாலமலையில் இருந்து நேற்று மாலை 5.30 மணியளவில் ஜீப் ஒன்று இறங்கி கொண்டு இருந்தது. அப்போது, மலையில் இருந்து 3வது கொண்டை ஊசி வளைவில் திரும்பிய போது, திடீரென ஜீப்பின் பிரேக் கட்டாகி ஜீப் பள்ளத்தின் கீழே விழுந்தது. இதில் ஜீப்பில் பயணித்த கோட்டத்துறையை சேர்ந்த சிவனம்மாள் (65), மாதவன் என்பவரின் மனைவி பாப்பம்மாள் (50) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேலும், ஜீப்பை ஓட்டி வந்த ஐயப்பன் (29) மற்றும் முருகன் (34), மாரியம்மாள் (80), மாதவன் (55) மருதன் (55) ஆகியோருக்கு தலை, கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.



இதைத்தொடர்ந்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் நடத்திய விசாரணையில் விபத்துக்கு உள்ளானவர்கள் பாலக்காடு மாவட்டம் அகழி கோட்டத்துறை அருகிலுள்ள வண்ணான்துறை மலைக்கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள் பாலமலை அடிவாரத்திலுள்ள ரங்கநாதபுரத்தை சேர்ந்த உறவினர் வீட்டில் வளைகாப்பு நிகழ்ச்சிக்குச் சென்று வீடு திரும்பும் போது விபத்துக்குள்ளானதும் தெரியவந்தது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...