கோவை: கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் ஆய்வு மேற்கொண்ட மீன்வளத்துறை அதிகாரிகள் 70 கிலோ பார்மலின் தடவிய மீன்கள் மற்றும் 430 கிலோ கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் ஆய்வு மேற்கொண்ட மீன்வளத்துறை அதிகாரிகள் 70 கிலோ பார்மலின் தடவிய மீன்கள் மற்றும் 430 கிலோ கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்தனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் பார்மலின் மற்றும் கெட்டுப்போன மீன்களை வியாபாரிகள் பொது மக்களுக்கு விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்தது.
இதனையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்செல்வன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் மீன்வளத்துறை அதிகாரிகளுடன் இணைந்து சோதனை மேற்கொள்வதற்காக 4 குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் மாவட்டம் முழுவதும் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் மீன் மார்க்கெட்டில் இருந்து 70 கிலோ பார்மலின் தடவிய மீன்கள் மற்றும் 430 கிலோ கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை அங்கே அழித்தனர்.
பின்னர் கடைக்காரர்களிடம், மொத்த வியாபாரிகளிடமும் அதிகாரிகள் கூறுகையில், பொது மக்களுக்கு கெட்டுப்போன மற்றும் ரசாயனம் கலந்த மீன்களை விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.