கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாததால் விடுவிப்பு

கோவை: மத்திய அரசு குறிப்பிட்ட 12 நாடுகளில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தவர்களில் பொது சுகாதாரத் துறையின் கண்காணிப்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருந்த நிலையில் தற்போது 78 பேரை மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.


கோவை: மத்திய அரசு குறிப்பிட்ட 12 நாடுகளில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தவர்களில் பொது சுகாதாரத் துறையின் கண்காணிப்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருந்த நிலையில் தற்போது 78 பேரை மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் பாதிப்பு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நோய் பாதிப்பினால் பல உயிர்கள் தொடர்ந்து பலியாகி வருகின்றனர். மேலும், இந்த நோயானது தொடர்ந்து பரவி வருவதால் அதை தடுக்கும் நோக்கில் சர்வதேச உலகமும் தங்களது ஆய்வினை தொடர்ந்து செய்து வருகிறது. இந்த நோய் பரவாமல் இருக்கவும் அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதேபோல மத்திய அரசு உத்தரவின் பேரில், விமான நிலையங்களில் கடந்த ஜனவரி 20ம் தேதி முதல் பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பாக சீனா, ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூர், ஜப்பான் , தென்கொரியா, நேபாளம்,இந்தோனேசியா, மலேசியா, வியட்நாம், ஈரான், இத்தாலி போன்ற போன்ற 12 நாடுகளில் இருந்து விமானம் மூலம் இந்தியாவிற்கு வருபவர்கள் தீவிர பரிசோதனைக்குப் பின்பே வெளியே அனுப்பப்படுகின்றனர். அதேசமயம், வைரஸ் அறிகுறிகள் ஏதாவது இருப்பின் உடனடியாக சுகாதாரத்துறைக்கு தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் குறிப்பிட்ட இந்த 12 நாடுகளிலிருந்து வந்த பயணிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சுகாதாரத்துறையின் கண்காணிப்பு வளையத்தில் இருந்தனர். இந்த நிலையில், தற்போது 78 பேராக கண்காணிப்பு வளையம் குறைந்துள்ளது.

அதேபோல, கொரோனா வைரஸ் சந்தேகம் தொடர்பாக மாணவர் ஒருவர் சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் இருந்த நிலையில் உயர்மட்ட பரிசோதனைக்காக இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இங்கு அவரது ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சென்னையிலுள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது.

மேலும், நேற்று சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்து சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த 40 வயது மதிக்கத்தக்க ஆண் நபரை விமான நிலையத்தில் பரிசோதனை செய்ததில் ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் சுகாதாரத்துறையினர் இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் இருவரும் இஎஸ்ஐ மருத்துவமனையில் உள்ள மருத்துவ கண்காணிப்பில் இருந்த நிலையில் தற்போது சுகாதாரத்துறையினர் அவர்களை விடுவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...