கூடலூர் தேவர்சோலையில் புலி தாக்கியதில் மாடு பலி; மீண்டும் புலி நடமாட்டத்தால் மக்கள் அதிர்ச்சி

நீலகிரி: கூடலூரை அடுத்துள்ள தேவர்சோலை பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற விவசாயி ராமனின் மாடினை புலி தாக்கிய சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி: கூடலூரை அடுத்துள்ள தேவர்சோலை பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற விவசாயி ராமனின் மாடினை புலி தாக்கிய சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கூடலூரை அடுத்துள்ள தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட கடை கிராமத்தில் வசிப்பவர் விவசாயி ராமன். இவரது மாட்டினை வழக்கம் போல் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். 



நேற்று முன்தினம் சென்ற அவரது மாடு இன்று மாலை வரை வரவில்லை என்பதால் மேய்ச்சலுக்கு சென்ற கடனா காெல்லிப்பகுதிக்கு சென்று பார்த்த போது மாட்டினை புலி அடித்து சாப்பிட்டு சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டவுடன், வனச்சரகர் ராமகிருஷ்ணன் தலைமையில் வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினார். பின்னர் புலி தாக்கி இறந்த மாட்டினை கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தனர்.

இதேபோல் ஒன்பதாவது மைல் மே பீல்டு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் மாலை நேரத்தில் புலி ஒன்று குட்டியுடன் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகளை ஒட்டி சாலையில் கடந்து சென்றதை மக்கள் பார்த்துள்ளனர். எனவே தேவர்சோலை சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் புலி நடமாட்டம் இருப்பதினால் பொதுமக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இப்பகுதியில் அடிக்கடி மாடுகளை புலி ஒன்று அடித்து சாப்பிட்டு வந்தது. மேலும், தமிழ் பிரேயர் தனியார் எஸ்டேட் பகுதியில் காவலாளி ஒருவரை தாக்கி கொன்றதையடுத்து அப்பகுதியில் நடமாடிய புலி சுட்டுக்கொல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...