நீலகிரி: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் நீலகிரி மாவட்டம் குந்தா படுகையில் அமைந்துள்ள போர்த்தி, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா மற்றும் பெகும்பஹள்ளா அணைகளின் அவசர கால நடவடிக்கை திட்டம் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் உதகையில் இன்று நடைபெற்றது.
நீலகிரி: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் நீலகிரி மாவட்டம் குந்தா படுகையில் அமைந்துள்ள போர்த்தி, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா மற்றும் பெகும்பஹள்ளா அணைகளின் அவசர கால நடவடிக்கை திட்டம் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் உதகையில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய மத்திய நீர்வள ஆணையத்தின் முதன்மை பொறியாளர் குல்ஷன் ராஜ், உலக வங்கி உதவியுடன் தமிழகம், கேரளா, கர்நாடக உள்ளிட்ட 7 மாநிலங்களில் உள்ள 223 அணைகள் முதல் கட்டமாக 3486 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்டு வருவதாகவும், இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுவதையடுத்து, இரண்டாம் கட்டமாக 736 அணைகள் ஒரு பில்லியன் டாலர் மதிப்பீட்டில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளதாகக் கூறினார். மேலும், சீனா, அமெரிக்கா நாடுகளையடுத்து இந்தியாவில் அதிகப்படியாக 5700 அணைகள் உள்ளதாகவும் தற்போது புதிதாக 411 அணைகள் கட்டப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த மழையினால் 77 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, அணைகள் நிரம்பிய போது மாவட்ட நிர்வாகத்துடன் அனைத்து துறைகள் ஒருங்கிணைந்து மேற்கொண்ட அவசர கால நடவடிக்கை திட்டத்தினால் இழப்புகள் பெருமளவு தவிர்க்கப்பட்டதாக கூறினார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத்தின் இயக்குநர் எத்திராஜ், உலக வங்கி ஆலோசகர் அஜித் குமார் பட்நாயக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய மத்திய நீர்வள ஆணையத்தின் முதன்மை பொறியாளர் குல்ஷன் ராஜ், உலக வங்கி உதவியுடன் தமிழகம், கேரளா, கர்நாடக உள்ளிட்ட 7 மாநிலங்களில் உள்ள 223 அணைகள் முதல் கட்டமாக 3486 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்டு வருவதாகவும், இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுவதையடுத்து, இரண்டாம் கட்டமாக 736 அணைகள் ஒரு பில்லியன் டாலர் மதிப்பீட்டில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளதாகக் கூறினார். மேலும், சீனா, அமெரிக்கா நாடுகளையடுத்து இந்தியாவில் அதிகப்படியாக 5700 அணைகள் உள்ளதாகவும் தற்போது புதிதாக 411 அணைகள் கட்டப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த மழையினால் 77 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, அணைகள் நிரம்பிய போது மாவட்ட நிர்வாகத்துடன் அனைத்து துறைகள் ஒருங்கிணைந்து மேற்கொண்ட அவசர கால நடவடிக்கை திட்டத்தினால் இழப்புகள் பெருமளவு தவிர்க்கப்பட்டதாக கூறினார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத்தின் இயக்குநர் எத்திராஜ், உலக வங்கி ஆலோசகர் அஜித் குமார் பட்நாயக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.