கோவையில் தென்னை நார் தொழிற்சாலைகளில் ஜிஎஸ்டி வரி கட்டாமல் ஏய்ப்பு செய்ததாக புகார்; ஜிஎஸ்டி அதிகாரிகள் திடீர் சோதனை

கோவை: பொள்ளாச்சி அருகேயுள்ள நெகமம் பகுதிகளில் தென்னை நார் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் ஜி.எஸ்.டி.,வரி செலுத்தாமல் ஏய்ப்பு செய்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

கோவை: பொள்ளாச்சி அருகேயுள்ள நெகமம் பகுதிகளில் தென்னை நார் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் ஜி.எஸ்.டி.,வரி செலுத்தாமல் ஏய்ப்பு செய்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, நெகமம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தென்னை நார் தயாரிக்கும் தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இந்த தென்னை நார் தயாரிக்கும் தொழில் நிறுவனங்களில் சில நிறுவனங்கள் தொடர்ச்சியாக ஜிஎஸ்டி வரி கட்டாமல் ஏய்ப்பு செய்து வருவதாக டெல்லியில் உள்ள ஜிஎஸ்டி ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

மேலும் இந்த தகவலின் போது கள்ளிப்பட்டி புதூரில் உள்ள 20க்கும் மேற்பட்ட தென்னை நார் தயாரிப்பு நிறுவனங்கள் ஜி எஸ் டி மற்றும் பஞ்சாயத்து வரி உள்ளிட்ட எதையும் செலுத்தாமல் ஆண்டுக்கு 250 கோடி வரை உற்பத்தி செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதனையடுத்து, டெல்லியிலிருந்து வந்த ஜி எஸ் டி அதிகாரிகள் கள்ளிப்பட்டி புதூரிலுள்ள சூர்யா காயர்ஸ், சோபியா காயர்ஸ் ,வேலு பைபர்ஸ், வெற்றி விநாயகா காயர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் ஜி எஸ் டி வரி செலுத்தி இருக்கின்றனரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.



மேலும், இந்த விசாரணையில் கடந்த நான்கு ஆண்டுகளாக பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டியும் இந்த குறிப்பிட்ட நிறுவனங்கள் ஜி.எஸ்.டி வரி செலுத்தாமல் ஏமாற்றி வந்ததாகவும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணையை அடுத்து மேலும் பல நிறுவனங்களில் விரைவில் விசாரணை நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...