கோவை: வால்பாறை சோலையார் அணையை உலக வங்கி நிதி உதவியுடன் பராமரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ள நிலையில் சோலையார் அணையை மத்திய நிபுணர்கள் குழு நேரில் ஆய்வு செய்தனர்.
கோவை: வால்பாறை சோலையார் அணையை உலக வங்கி நிதி உதவியுடன் பராமரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ள நிலையில் சோலையார் அணையை மத்திய நிபுணர்கள் குழு நேரில் ஆய்வு செய்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் பரம்பிகுளம் ஆழியார் திட்டத்தின் மூல அணையான சோலையார் அணை உள்ளது. இந்த அணையில் சேகரிக்கப்படும் நீர் இரண்டு மின் நிலையங்களை கடந்து பரம்பிகுளம் அணைக்கு செல்கிறது. அங்கிருந்து கேரளா மற்றும் தமிழக அணைகளான ஆழியார், திருமூர்த்தி அணைக்கு செல்கிறது. இதன் மூலம் பொள்ளாச்சி, திருப்பூர் தாராபுரம், பல்லடம், பகுதிகளின் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயத்திற்கும் குடி நீருக்கும் பயன்படுகிறது.

இந்நிலையில், இந்த அணையை உலக வங்கி நிதி உதவியுடன் பராமரிக்க தமிழக அரசு முடிவெடுத்தது.

இதனை முன்னிட்டு மத்திய நீர் குழுமத்தின் தலைவர் பத்மநாபன் தலைமையில் உறுப்பினர்கள் மிட்டல், நரேஷ்குமார் மாதூர், சதீஷ்குமார், ஸ்ரீ வஸ்தவா ஹைதராபாத், முராரி ரத்னம் டெல்லி, மத்திய புவியியல் ஆய்வு குழுமத் துணை இயக்குநர் ஸ்ரீனிவாசன், மாநில திட்ட மேலாண்மை இயக்குநர் காளிமுத்து ஆகியோர் சோலையார் அணையின் நீர்பிடிப்பு பகுதியான சின்னகல்லார், கீழ் நீரார் அணையை பார்வையிட்ட பின் சோலையார் அணையை பார்வையிட்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நீர் குழுமத்தின் தலைவர் பத்மநாபன் பேசுகையில், அணையின் உறுதி தன்மை, கட்டுமான உறுதி மற்றும் பராமரிப்பு பணிகள் பற்றிய ஆலோசனை நடத்தப்பட்டு அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும் எனவும் அதனை தொடர்ந்து உலக வங்கி நிதி உதவியுடன் திட்டம் 2ன் படி பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்று தெரிவித்தார்.
கோவை மாவட்டம் வால்பாறையில் பரம்பிகுளம் ஆழியார் திட்டத்தின் மூல அணையான சோலையார் அணை உள்ளது. இந்த அணையில் சேகரிக்கப்படும் நீர் இரண்டு மின் நிலையங்களை கடந்து பரம்பிகுளம் அணைக்கு செல்கிறது. அங்கிருந்து கேரளா மற்றும் தமிழக அணைகளான ஆழியார், திருமூர்த்தி அணைக்கு செல்கிறது. இதன் மூலம் பொள்ளாச்சி, திருப்பூர் தாராபுரம், பல்லடம், பகுதிகளின் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயத்திற்கும் குடி நீருக்கும் பயன்படுகிறது.

இந்நிலையில், இந்த அணையை உலக வங்கி நிதி உதவியுடன் பராமரிக்க தமிழக அரசு முடிவெடுத்தது.

இதனை முன்னிட்டு மத்திய நீர் குழுமத்தின் தலைவர் பத்மநாபன் தலைமையில் உறுப்பினர்கள் மிட்டல், நரேஷ்குமார் மாதூர், சதீஷ்குமார், ஸ்ரீ வஸ்தவா ஹைதராபாத், முராரி ரத்னம் டெல்லி, மத்திய புவியியல் ஆய்வு குழுமத் துணை இயக்குநர் ஸ்ரீனிவாசன், மாநில திட்ட மேலாண்மை இயக்குநர் காளிமுத்து ஆகியோர் சோலையார் அணையின் நீர்பிடிப்பு பகுதியான சின்னகல்லார், கீழ் நீரார் அணையை பார்வையிட்ட பின் சோலையார் அணையை பார்வையிட்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நீர் குழுமத்தின் தலைவர் பத்மநாபன் பேசுகையில், அணையின் உறுதி தன்மை, கட்டுமான உறுதி மற்றும் பராமரிப்பு பணிகள் பற்றிய ஆலோசனை நடத்தப்பட்டு அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும் எனவும் அதனை தொடர்ந்து உலக வங்கி நிதி உதவியுடன் திட்டம் 2ன் படி பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்று தெரிவித்தார்.