கோவை: மனிதநேயத்தை வலியுறுத்தி கோவையில் இன்று நடைபெற்று வரும் கோனியம்மன் தேர் விழாவில் ஒப்பணக்கார வீதியில் உள்ள கோயமுத்தூர் அத்தார் ஜமாத் பள்ளிவாசல் சார்பாக பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தண்ணீர் பாட்டில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது
கோவை: மனிதநேயத்தை வலியுறுத்தி கோவையில் இன்று நடைபெற்று வரும் கோனியம்மன் தேர் விழாவில் ஒப்பணக்கார வீதியில் உள்ள கோயமுத்தூர் அத்தார் ஜமாத் பள்ளிவாசல் சார்பாக பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தண்ணீர் பாட்டில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது

கோவையின் காவல்தெய்வம் என போற்றப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாத திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வாக அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் கோனியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேர்ப்பவனி நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில், இந்தாண்டிற்கான கோனியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று மதியம் 2 மணி முதல் தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேரோட்டத்தின் போது, ஒப்பணக்கார வீதியில் உள்ள கோயமுத்தூர் அத்தார் ஜமாத் பள்ளிவாசல் சார்பாக பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தண்ணீர் பாட்டில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கோயமுத்தூர் அத்தார் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.