திருப்பூர்: திருப்பூரில் முறைகேடாக கடத்திவரப்பட்ட கிராவல் மண்ணை தடுப்பு ஆய்வு செய்த வருவாய் ஆய்வாளர் மீது காரை ஏற்றி கொல்ல முயற்சித்ததாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
திருப்பூர்: திருப்பூரில் முறைகேடாக கடத்திவரப்பட்ட கிராவல் மண்ணை தடுப்பு ஆய்வு செய்த வருவாய் ஆய்வாளர் மீது காரை ஏற்றி கொல்ல முயற்சித்ததாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
திருப்பூர் நல்லூர் நில வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சிவசக்தி. இவர் புதுப்பாளையம் பகுதியில் கிராவல் மண் முறைகேடாக ஏற்றி வருவதாக வந்த தகவலையடுத்து அப்பகுதியில் ஆய்வை மேற்கொண்டுள்ளார்.

அப்போது, அவ்வழியே வந்த லாரியை மடக்கி விசாரணை செய்த போது லாரியின் உரிமையாளர் அப்பு குட்டி என்பவர் நில வருவாய் அலுவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வருவாய் ஆய்வாளர் கூறியும் லாரியை நிறுத்தாமல் மண்ணை கொட்டி விட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து லாரி உரிமையாளர் அப்புகுட்டியிடம் விளக்கம் கேட்டுக் கொண்டிருந்த போதே காரை நிறுத்தாமல் நில வருவாய் ஆய்வாளர் சிவசக்தியின் காலில் காரை ஏற்றி விட்டு சென்றுள்ளார்.

இதனை அடுத்து, ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்ற சிவசக்தி தனது பணிக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் லாரியின் உரிமையாளர் மீது நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
திருப்பூர் நல்லூர் நில வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சிவசக்தி. இவர் புதுப்பாளையம் பகுதியில் கிராவல் மண் முறைகேடாக ஏற்றி வருவதாக வந்த தகவலையடுத்து அப்பகுதியில் ஆய்வை மேற்கொண்டுள்ளார்.

அப்போது, அவ்வழியே வந்த லாரியை மடக்கி விசாரணை செய்த போது லாரியின் உரிமையாளர் அப்பு குட்டி என்பவர் நில வருவாய் அலுவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வருவாய் ஆய்வாளர் கூறியும் லாரியை நிறுத்தாமல் மண்ணை கொட்டி விட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து லாரி உரிமையாளர் அப்புகுட்டியிடம் விளக்கம் கேட்டுக் கொண்டிருந்த போதே காரை நிறுத்தாமல் நில வருவாய் ஆய்வாளர் சிவசக்தியின் காலில் காரை ஏற்றி விட்டு சென்றுள்ளார்.

இதனை அடுத்து, ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்ற சிவசக்தி தனது பணிக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் லாரியின் உரிமையாளர் மீது நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.