கோவை: வால்பாறை தொகுதிக்குட்பட்ட அங்கலகுறிச்சியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.
கோவை: வால்பாறை தொகுதிக்குட்பட்ட அங்கலகுறிச்சியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.

கோவை மாவட்டம் வால்பாறை தொகுதிக்குட்பட்ட அங்கலகுறிச்சியில் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியிலிருந்து கட்டப்பட்ட நிலையில், அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு குத்து விளக்கேற்றி அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து அங்கலகுறிச்சியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டிலான தார்சாலை அமைக்கும் பணியினை பூமி பூஜை போட்டு துவக்கி வைத்தார்.
இந்த விழாவில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, வேட்டைக்காரன் புதூரில் உள்ள தமிழ்நாடு சுகாதார மகப்பேறு மருத்துவமனையில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அடிப்படை வசதிகள் மகப்பேறு மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிப் பெண்கள் பற்றி கேட்டறிந்தார்.