திருப்பூர்: திருப்பூர் அருகே ஹெல்மெட் அணிந்து கொண்டு சுவர் ஏறி குதித்து வீட்டில் இருந்த பெண்ணிடம் அரிவாளை காட்டி மிரட்டி 11 பவுன் தங்க நகைகளை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர்: திருப்பூர் அருகே ஹெல்மெட் அணிந்து கொண்டு சுவர் ஏறி குதித்து வீட்டில் இருந்த பெண்ணிடம் அரிவாளை காட்டி மிரட்டி 11 பவுன் தங்க நகைகளை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் சொர்ணபுரி ஐலண்ட் பகுதியில் வசித்து வருபவர் எபினேசர், பூங்கொடி தம்பதியினர் பாலிபேக் நிறுவனம் வைத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2ம் தேதி இரவு எபினேசர் வீட்டில் இல்லாதபோது பூங்கொடி மற்றும் அவரது மகனுடன் வீட்டில் இருந்துள்ளார்.
அப்போது, ஹெல்மெட் அணிந்து கொண்டு சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் சென்ற மர்ம நபர், அரிவாளை காட்டி மிரட்டி பூங்கொடி அணிந்திருந்த 11 பவுன் தங்க நகைகளை பறித்துச் சென்றுள்ளார். ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளே செல்வதும் அரிவாளோடு வெளியே வருவதும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியதை அடுத்து தற்போது 15 வேலம்பாளையம் போலீசார் விசாரணை மேற்கண்டு வருகின்றனர்.
திருப்பூர் சொர்ணபுரி ஐலண்ட் பகுதியில் வசித்து வருபவர் எபினேசர், பூங்கொடி தம்பதியினர் பாலிபேக் நிறுவனம் வைத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2ம் தேதி இரவு எபினேசர் வீட்டில் இல்லாதபோது பூங்கொடி மற்றும் அவரது மகனுடன் வீட்டில் இருந்துள்ளார்.
அப்போது, ஹெல்மெட் அணிந்து கொண்டு சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் சென்ற மர்ம நபர், அரிவாளை காட்டி மிரட்டி பூங்கொடி அணிந்திருந்த 11 பவுன் தங்க நகைகளை பறித்துச் சென்றுள்ளார். ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளே செல்வதும் அரிவாளோடு வெளியே வருவதும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியதை அடுத்து தற்போது 15 வேலம்பாளையம் போலீசார் விசாரணை மேற்கண்டு வருகின்றனர்.