கோவை மாநகராட்சி வளர்ச்சி பணிகள்: ஆணையர் நேரில் ஆய்வு; விரைந்து முடிக்க உத்தரவு

கோவை: கோவை மாநகராட்சியின் மேற்கு மண்டலத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலர் ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ நேரில் சென்று இன்று ஆய்வு மேற்கொண்டார்.

கோவை: கோவை மாநகராட்சியின் மேற்கு மண்டலத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலர் ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ நேரில் சென்று இன்று ஆய்வு மேற்கொண்டார்.



கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம்‌ 24-வது வார்டில் உள்ள ஆர்‌.எஸ்‌.புரம்‌ பகுதியில்‌ ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின்கீழ்‌ பாதாள சாக்கடை பணிகள்‌ மற்றும்‌ குடிநீர்‌ திட்டப்‌ பணிகள்‌ எந்தளவு நிறைவு பெற்றுள்ளது என்பது குறித்து ஆணையர் ஆய்வு நடத்தினார். 



பின்னர்‌, மேற்கு மண்டலம்‌ 7-வது வார்டில் உள்ள கவுண்டம்பாளையம்‌ மற்றும் வ.உ.சி. நகர்‌ பிரதான சாலை பகுதியில்‌ 61.00 இலட்ச ரூபாய் மதிப்பில்‌ அமைக்கப்படும் தார்சாலை அமைக்கும்‌ பணிகளையும், அதே போல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ்‌ புதிதாக ஆர்‌.எஸ்‌.புரம்‌ பகுதியில்‌ கட்டப்பட்டுவரும்‌ பலஅடுக்குகள்‌ கொண்ட வாகனநிறுத்துமிட பணிகள்‌ (Multi Level CarParking) நடைபெறுவதையும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலர்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



மேலும், மேற்கு மண்டலம்‌, 5-வது வார்டு கவுண்டம்பாளையம்‌ பகுதியில்‌ புதிதாக கட்டப்பட்டுவரும்‌ மின்‌ மயானத்தின்‌ பணிகள்‌ நடைபெறுவதையும் நேரில் பார்வையிட்ட ஆணையர் விரைவில் பணிகளை முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஆய்வின்போது, மேற்கு மண்டல உதவி ஆணையர்‌ ஏ.ஜே.செந்தில்‌௮ரசன்‌, செயற்பொறியாளர்‌ (ஸ்மாரா்ட்‌ சிட்டி) வி.சரவணக்குமார்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...