கோவையில் பாஜக போராட்டத்தை தடுத்து நிறுத்த வலியுறுத்தி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காவல் ஆணையாளரிடம் புகார்

கோவை: பாரதிய ஜனதா கட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து நடைபெற்று வரும் போராட்டம் தொடர்பாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

கோவை: பாரதிய ஜனதா கட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து நடைபெற்று வரும் போராட்டம் தொடர்பாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்புகள் கடந்த 14 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று முதல் பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் மாலை நேர தொடர் போராட்டம் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் திமுக மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ தலைமையில் அவசர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதச்சார்பற்ற கூட்டணிகளுக்கு எந்தவிதமான போராட்டத்திற்கும் அனுமதி கொடுக்காத காவல்துறை, காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் முன்பு கோவையில் பதற்றத்தையும் வன்முறையும் தூண்டுகின்ற வகையில் நடைபெறுகிற போராட்டத்திற்கு காவல்துறை எப்படி அனுமதி கொடுத்தது என தீர்மானம் இயற்றப்பட்டு, மாநகர காவல் ஆணையாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுப்பதாக முடிவு எடுக்கப்பட்டது.



அதன்படி, இன்று கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் திமுக, தபெதிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் என 200க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடினர். பின்னர் போலீசார் முக்கிய நிர்வாகிகளை மட்டும் மாநகர காவல் ஆணையாளரை சந்திக்க அனுமதித்தனர். இதைத்தொடர்ந்து திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தலைமையில் பல்வேறு அமைப்பினர் காவல் ஆணையாளரை சந்தித்து மனு அளித்தனர்.

இதைத் தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர்கள் செய்தியாளர்களிடம் கூறும்போது;-

அனுமதி இல்லாத இடத்தில் பாரதிய ஜனதா கட்சி மேற்கூரை அமைத்து ஒலிபெருக்கி வைத்து தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறது. இது கோவையில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஆகவே, தாங்கள் இந்த மனுவை உடனடியாக ஆய்வு செய்து பா.ஜ.கட்சியின் போராட்டத்தை தடுத்து நிறுத்தி கோவையின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...