கோவையில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த இளைஞர் குண்டர்‌ சட்டத்தில் கைது

கோவை: கோவையில் முதியவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்துச் சென்ற இளைஞரை போலீசார் குண்டர்‌ தடுப்பு காவல்‌ சட்டத்தில் கைது செய்து கோவை மத்திய சிறையில்‌ அடைத்தனர்.

கோவை: கோவையில் முதியவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்துச் சென்ற இளைஞரை போலீசார் குண்டர்‌ தடுப்பு காவல்‌ சட்டத்தில் கைது செய்து கோவை மத்திய சிறையில்‌ அடைத்தனர்.

கோவை இரயில்‌ நிலையத்தின்‌ பின்புறமுள்ள பார்சல்கள்‌ ஏற்றிச்‌ செல்லும்‌ பாதை வழியாக சென்று தண்டவாளத்தை கடப்பதற்காக சுப்பிரமணியன்‌ என்பவர் நின்றிருந்துள்ளார். அப்போது, கோவை சுங்கம்‌ பைப்பாஸ் தியாகி சிவராம்‌ நகரை சேர்ந்த பிரமோத்‌ குமார்‌ (23) சுப்பிரமணியனிடம் கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி பணம்‌ பறித்து சென்றுள்ளார்.

இதையடுத்து, கோவை இருப்புப்பாதை காவல்‌ வட்ட காவல்‌ ஆய்வாளர்‌ கிருஷ்ணலீலா குற்றவாளியை கைது செய்து அவனிடம்‌ இருந்து பணத்தை மீட்டு அவனிடம் விசாரித்த போது, அவன் மீது ஏற்கனவே சென்னை பட்டாபிராம்‌ காவல்‌ நிலையத்தில்‌ 6 வழக்குகளும்‌, பெரம்பூர்‌ இருப்புப்பாதை காவல்‌ நிலையத்தில்‌ 1 வழக்கும்‌, முத்துப்புதூர்‌ காவல்‌ நிலையத்தில்‌ 4 வழக்குகளும்‌, ஆவடி காவல்‌ நிலையத்தில்‌ 1 வழக்கும்‌ மற்றும்‌ கோவை மாநகர இராமநாதபுரம்‌ காவல்‌ நிலையத்தில்‌ 1 வழக்கும்‌ மொத்தம்‌ 13 வழக்குகளில்‌ சம்மந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, இருப்புப்பாதை காவல்துறை இயக்குநர்‌ முனைவர்‌ சைலேந்திரபாபு, இருப்புப்பாதை காவல்துறை தலைவர்‌ வனிதா மற்றும்‌ காவல்‌ கண்காணிப்பாளர்‌ மகேஸ்வரன்‌ அவர்கள்‌ ஆணையின்‌ பேரில்‌ கோயமுத்தூர்‌ உட்கோட்ட காவல்‌ துணைக்‌ கண்காணிப்பாளர்‌ அண்ணாதுரை அவர்களின்‌ அறிவுரையின்படி கோவை காவல்‌ வட்ட ஆய்வாளர்‌ கிருஷ்ணலீலா அவர்கள்‌ நடவடிக்கை எடுத்து, கோவை மாநகர காவல்‌ ஆணையர்‌ அவர்கள்‌ பரிந்துரை செய்ததின்‌ பேரில்‌ பிரமோத்குமாரை குண்டர்‌ சட்டத்தில்‌ கோவை மத்திய சிறையில்‌ அடைத்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...