கோவை: மேட்டுப்பாளையம் அருகே 1200 ஆண்டுகள் பழமைவாய்ந்த காரமடை அரங்கநாதர் கோவில் மாசிமக தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது.
கோவை: மேட்டுப்பாளையம் அருகே 1200 ஆண்டுகள் பழமைவாய்ந்த காரமடை அரங்கநாதர் கோவில் மாசிமக தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை அரங்கநாதர் கோவில் சுமார் 1200 ஆண்டுகள் பழமைவாய்ந்த கொங்கு மண்டலத்தின் புகழ்பெற்ற வைணவ திருக்கோவிலாகும். இங்கு மாசிமக தேர்த்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டிற்கான தேர்த்திருவிழா நிகழ்ச்சி இன்று கொடியேற்ற நிகழ்வுடன் துவங்கியது.

அதிகாலை முதலே மூலவர் அரங்கநாதருக்கு விஷேச பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது, இதனை தொடர்ந்து, கொடியேற்ற நிகழ்வினையொட்டி கோவில் மூலவர் முன்பு அமைந்துள்ள கொடி மரத்தின் அருகே உள்ள கருடாழ்வார் சிலைக்கு பால், திருமஞ்சனம் ஆகியவை கொண்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன.
இதனை அடுத்து, கருடாழ்வார் உருவம் பொறித்த கொடி மேளதாளம் முழங்க கோவில் உட்பிரகாரத்தை சுற்றி வலம் வந்து வேத விர்பனர்கள் மந்திரங்கள் முழங்க கொடி மரத்தில் கொடி ஏற்பட்டது. அப்போது, அங்கு கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா கோசங்களை எழுப்பி அரங்கநாதரை வழிபட்டனர். இந்த கொடியேற்ற நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
மேலும், இன்று நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியினையடுத்து தொடர்ந்து எட்டு நாட்களுக்கு அரங்கநாதருக்கு தினசரி பல்வேறு சிறப்பு வைபவங்கள் நடத்தப்பட்டு அரங்கநாதர் திருவீதி உலா நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து வரும் 8ம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை அரங்கநாதர் கோவில் சுமார் 1200 ஆண்டுகள் பழமைவாய்ந்த கொங்கு மண்டலத்தின் புகழ்பெற்ற வைணவ திருக்கோவிலாகும். இங்கு மாசிமக தேர்த்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டிற்கான தேர்த்திருவிழா நிகழ்ச்சி இன்று கொடியேற்ற நிகழ்வுடன் துவங்கியது.

அதிகாலை முதலே மூலவர் அரங்கநாதருக்கு விஷேச பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது, இதனை தொடர்ந்து, கொடியேற்ற நிகழ்வினையொட்டி கோவில் மூலவர் முன்பு அமைந்துள்ள கொடி மரத்தின் அருகே உள்ள கருடாழ்வார் சிலைக்கு பால், திருமஞ்சனம் ஆகியவை கொண்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன.
இதனை அடுத்து, கருடாழ்வார் உருவம் பொறித்த கொடி மேளதாளம் முழங்க கோவில் உட்பிரகாரத்தை சுற்றி வலம் வந்து வேத விர்பனர்கள் மந்திரங்கள் முழங்க கொடி மரத்தில் கொடி ஏற்பட்டது. அப்போது, அங்கு கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா கோசங்களை எழுப்பி அரங்கநாதரை வழிபட்டனர். இந்த கொடியேற்ற நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
மேலும், இன்று நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியினையடுத்து தொடர்ந்து எட்டு நாட்களுக்கு அரங்கநாதருக்கு தினசரி பல்வேறு சிறப்பு வைபவங்கள் நடத்தப்பட்டு அரங்கநாதர் திருவீதி உலா நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து வரும் 8ம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.