ஆக்கிரமிப்பு பஞ்சமி நிலங்களை மீட்டு வீடு இல்லாத அருந்ததிய மக்களுக்கு வழங்கக் கோரி கோவை ஆட்சியரிடம் மனு

கோவை: ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு வீடில்லாத அருந்ததிய மக்களுக்கு வழங்கக்கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் சமூக நீதி கட்சியினர் மனு அளித்தனர்.

கோவை: ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு வீடில்லாத அருந்ததிய மக்களுக்கு வழங்கக்கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் சமூக நீதி கட்சியினர் மனு அளித்தனர்.



கோவை மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று சமூக நீதி கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில், மேட்டுப்பாளையம் பகுதியில் கொடுக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை மாற்று சமூகத்தினர் ஆக்கிரமித்து உள்ளதாகவும் இதனை மீட்டு தர பலமுறை மனுக்கள் அளித்துள்ளதாகவும் பஞ்சமி நிலங்களை மீட்டு நிலமில்லாத மக்களுக்கு வழங்கிட வேண்டும் என வலியுறுத்தினர்.



மேலும், 450 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி மனுக்கள் அளிக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறிய அவர்கள், தற்போது நிலமில்லாத அருந்ததியர் சமூகத்தை சார்ந்த மக்கள் அதிக அளவில் உள்ளதால் மேட்டுப்பாளையம் பகுதியில் வசிக்கும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 800 பேருக்கு பஞ்சமி நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் இருந்து மீட்டு பஞ்சமி நிலங்களில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...