கோவை: கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி தொழிலாளர்களுக்கு உடனடியாக கூலி உயர்வு அளிக்காவிட்டால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்த கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.
கோவை: கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி தொழிலாளர்களுக்கு உடனடியாக கூலி உயர்வு அளிக்காவிட்டால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்த கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 2.5 லட்சம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. அதில் 95 சதவீத விசைத்தறிகள் கூலியின் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன. ஆனால், கடந்த ஆறு ஆண்டுகளாக விசைத்தறி தொழிலாளர்களின் கூலி உயர்த்தப்படாமல் உள்ளது. இதனையடுத்து தங்களுக்கு கூலி உயர்வு வழங்கக் கோரி தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணியை சந்தித்து கூலி உயர்வு செய்ய நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பின் தலைவர் பழனிச்சாமி, கூலி உயர்வு பிரச்சனை கடந்த 6 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருப்பதாகவும், தொழிலாளர்கள் நலத்துறை அதிகாரிகள் கூலி உயர்வு பிரச்சனைக்கு தீர்வு காண மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், மாவட்ட ஆட்சியர் ஒரு வாரத்திற்குள் கூலி உயர்வு பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும் என உறுதி அளித்ததாகவும், அதற்குள் தீர்வு காணாவிட்டால் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் விசைத்தறிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்தார்.
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 2.5 லட்சம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. அதில் 95 சதவீத விசைத்தறிகள் கூலியின் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன. ஆனால், கடந்த ஆறு ஆண்டுகளாக விசைத்தறி தொழிலாளர்களின் கூலி உயர்த்தப்படாமல் உள்ளது. இதனையடுத்து தங்களுக்கு கூலி உயர்வு வழங்கக் கோரி தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணியை சந்தித்து கூலி உயர்வு செய்ய நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பின் தலைவர் பழனிச்சாமி, கூலி உயர்வு பிரச்சனை கடந்த 6 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருப்பதாகவும், தொழிலாளர்கள் நலத்துறை அதிகாரிகள் கூலி உயர்வு பிரச்சனைக்கு தீர்வு காண மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், மாவட்ட ஆட்சியர் ஒரு வாரத்திற்குள் கூலி உயர்வு பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும் என உறுதி அளித்ததாகவும், அதற்குள் தீர்வு காணாவிட்டால் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் விசைத்தறிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்தார்.