கோவை: கோவையில் 16 வயது சிறுமியைத் திருமணம் செய்த வழக்கில் இளைஞர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை: கோவையில் 16 வயது சிறுமியைத் திருமணம் செய்த வழக்கில் இளைஞர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (23). கூலி தொழிலாளியான இவர் கோவை, மரக்கடை பகுதியில் தங்கி வேலை செய்து வந்தார். இந்நிலையில், தனது மனைவியை ரஞ்சித் குமார் கடத்திச் சென்றதாக மரக்கட்டையை சேர்ந்த முகமது நிஷார் என்பவர் வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில், முகமது நிஷாருக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான் திருமணம் ஆனது என்றும், தனது மனைவிக்கு 16 வயது என்று அவர் குறிப்பிட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இச்சம்பவம் குறித்து வெரைட்டி ஹால் போலீசார் மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் சிறுமியைக் கடத்திச் சென்ற ரஞ்சித் குமாரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்.
இதையடுத்து, 16 வயது சிறுமியைத் திருமணம் செய்த முகமது நிஷாரையும் போக்ஸோ சட்டம் மற்றும் குழந்தைத் திருமண தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், திருமணம் செய்து வைத்த முகமது நிஷாரின் பெற்றோர் மற்றும் சிறுமியின் தாயாரையும் குழந்தைத் திருமண தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (23). கூலி தொழிலாளியான இவர் கோவை, மரக்கடை பகுதியில் தங்கி வேலை செய்து வந்தார். இந்நிலையில், தனது மனைவியை ரஞ்சித் குமார் கடத்திச் சென்றதாக மரக்கட்டையை சேர்ந்த முகமது நிஷார் என்பவர் வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில், முகமது நிஷாருக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான் திருமணம் ஆனது என்றும், தனது மனைவிக்கு 16 வயது என்று அவர் குறிப்பிட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இச்சம்பவம் குறித்து வெரைட்டி ஹால் போலீசார் மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் சிறுமியைக் கடத்திச் சென்ற ரஞ்சித் குமாரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்.
இதையடுத்து, 16 வயது சிறுமியைத் திருமணம் செய்த முகமது நிஷாரையும் போக்ஸோ சட்டம் மற்றும் குழந்தைத் திருமண தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், திருமணம் செய்து வைத்த முகமது நிஷாரின் பெற்றோர் மற்றும் சிறுமியின் தாயாரையும் குழந்தைத் திருமண தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.