கோவை: பின்தங்கிய மக்கள் முன்னேற்றத்திற்காக டாக்டர் ஆர் எம் ஆர் பாசறை அமைப்பு இன்று முதல் தொடங்கப்படுவதாக கோவையில் ஓய்வுபெற்ற முன்னாள் தலைமை செயலாளர் டாக்டர் ராம் மோகன் ராவ் அறிவித்தார்.
கோவை: பின்தங்கிய மக்கள் முன்னேற்றத்திற்காக டாக்டர் ஆர் எம் ஆர் பாசறை அமைப்பு இன்று முதல் தொடங்கப்படுவதாக கோவையில் ஓய்வுபெற்ற முன்னாள் தலைமை செயலாளர் டாக்டர் ராம் மோகன் ராவ் அறிவித்தார்.

கோவை சுந்தராபுரம் உள்ள செங்கப்ப கோனார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு போயர் சமுதாயத்தின் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய ஓய்வுபெற்ற முன்னாள் தலைமை செயலாளர் டாக்டர் ராம் மோகன் ராவ், தமிழகத்திலுள்ள ரெட்டியார் செட்டியார் யாதவர் ,நாயுடு, நாயக்கர் பிராமணர் அருந்ததியர் என பல்வேறு சமுதாய மக்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பல்வேறு கூட்டங்களை ஏற்படுத்த உள்ளோம். அரசியல் அதிகாரத்தில் இதுவரை பங்கேற்பு ஏதும் பெற முடியாத மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ள பல்வேறு சமூகங்களை ஒன்றிணைத்து ஒரு மிகப்பெரிய சமுதாய அமைப்பை உருவாக்க திட்டமிட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி எல்லா மக்களுக்கும் எல்லா வாய்ப்புகளும் கிடைக்க வேண்டும். திருவள்ளுவர். வள்ளலார். காந்தியடிகள். தந்தை பெரியார். டாக்டர் அம்பேத்கார். ராம் மனோகர் லோகியா. போன்ற மகத்தான சிந்தனையாளர்களை உள்வாங்கி இந்த நவீன காலத்திற்கு ஏற்ப செயல்திட்டங்களை உருவாக்கப்படும், இதற்காக ஊர் ஊராக சென்று மக்களை சந்தித்து சமுதாய ஒருங்கிணைப்பு உருவாக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்காக டாக்டர் ஆர் எம் ஆர் பாசறை அமைப்பு இன்று முதல் தமிழகம் முழுவதும் செயல்படும் எனவும் அறிவித்தார்.
இந்த மாநாட்டிற்கு மாநிலத்தலைவர் பூபதி தலைமை தாங்கினார், கொள்கை பரப்பு செயலாளர் சௌந்தரராஜன் , மாநில நிர்வாகிகள் நாகராஜ், சிவகுமார், தாமோதரன், சிங்கை கோபாலகிருஷ்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் கோவை ,திருப்பூர், நீலகிரி ,சேலம் ,கரூர் நாமக்கல் ,திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த போயர் சமுதாய நிர்வாகிகள் மற்றும் சிறுபான்மையினர் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

கோவை சுந்தராபுரம் உள்ள செங்கப்ப கோனார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு போயர் சமுதாயத்தின் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய ஓய்வுபெற்ற முன்னாள் தலைமை செயலாளர் டாக்டர் ராம் மோகன் ராவ், தமிழகத்திலுள்ள ரெட்டியார் செட்டியார் யாதவர் ,நாயுடு, நாயக்கர் பிராமணர் அருந்ததியர் என பல்வேறு சமுதாய மக்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பல்வேறு கூட்டங்களை ஏற்படுத்த உள்ளோம். அரசியல் அதிகாரத்தில் இதுவரை பங்கேற்பு ஏதும் பெற முடியாத மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ள பல்வேறு சமூகங்களை ஒன்றிணைத்து ஒரு மிகப்பெரிய சமுதாய அமைப்பை உருவாக்க திட்டமிட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி எல்லா மக்களுக்கும் எல்லா வாய்ப்புகளும் கிடைக்க வேண்டும். திருவள்ளுவர். வள்ளலார். காந்தியடிகள். தந்தை பெரியார். டாக்டர் அம்பேத்கார். ராம் மனோகர் லோகியா. போன்ற மகத்தான சிந்தனையாளர்களை உள்வாங்கி இந்த நவீன காலத்திற்கு ஏற்ப செயல்திட்டங்களை உருவாக்கப்படும், இதற்காக ஊர் ஊராக சென்று மக்களை சந்தித்து சமுதாய ஒருங்கிணைப்பு உருவாக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்காக டாக்டர் ஆர் எம் ஆர் பாசறை அமைப்பு இன்று முதல் தமிழகம் முழுவதும் செயல்படும் எனவும் அறிவித்தார்.
இந்த மாநாட்டிற்கு மாநிலத்தலைவர் பூபதி தலைமை தாங்கினார், கொள்கை பரப்பு செயலாளர் சௌந்தரராஜன் , மாநில நிர்வாகிகள் நாகராஜ், சிவகுமார், தாமோதரன், சிங்கை கோபாலகிருஷ்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் கோவை ,திருப்பூர், நீலகிரி ,சேலம் ,கரூர் நாமக்கல் ,திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த போயர் சமுதாய நிர்வாகிகள் மற்றும் சிறுபான்மையினர் என ஏராளமானோர் பங்கேற்றனர்.