கோவை: டெல்லி கலவரத்திற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் உள்ளிட்ட 17 தீர்மானங்கள் கோவையில் நடைபெற்ற வாழ்வுரிமை மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
கோவை: டெல்லி கலவரத்திற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் உள்ளிட்ட 17 தீர்மானங்கள் கோவையில் நடைபெற்ற வாழ்வுரிமை மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

கோவை கொடிசியா மைதானத்தின் மனித நேய ஜனநாயக கட்சியின் சார்பில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வாழ்வுரிமை மாநாடு நடைபெற்றது. தமிமீன் அன்சாரி தலைமையில் நடைபெற்ற மாநாட்டின் போது , குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வாக்களித்த அதிமுகவிற்கு எம்பிகளுக்கும், அதிமுக அரசிற்கும் கடும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் சமூக நீதி கோட்பாடுகளுக்கு எதிராக இன்றைய அதிமுக தலைமை செல்வது தமிழக மக்களின் மனநிலைக்கு எதிரானது எனவும் தீரமானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில், டெல்லி கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 50 லட்சம் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், தமிழகத்தில் வசிக்கும் ஈழத்தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட வேண்டும், இந்தியாவில் சி.ஏ.ஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சி சட்டங்களை அமல்படுத்த கூடாது, வண்ணாரப்பேட்டையில் சி.ஏ.ஏ சட்டத்திற்கு எதிராக போராடிய இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல் துறை அதிகாரிகள் கபில்தேவ், தினகரன் ஆகியோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
