நீலகிரி: உதகை நகராட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் துப்புரவு ஆய்வாளர்களிடமிருந்து ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 80 ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.
நீலகிரி: உதகை நகராட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் துப்புரவு ஆய்வாளர்களிடமிருந்து ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 80 ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.
உதகை நகராட்சிக்கு உட்பட்ட கடைகளுக்கான உரிம ரசீதினை புதுப்பிக்க பணம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு வந்த புகார் வந்துள்ளது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை DSP தட்சிணாமூர்த்தி தலைமையில் ஆய்வாளர் கீதாலட்சுமி மற்றும் SI சாதனப்ரியா மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் இன்று இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின் போது நகராட்சியின்
துப்புரவு ஆய்வாளர்கள் பாஸ்கரன், தியாகராஜன், மகாராஜ், ஞானசேகர் ஆகிய நான்கு பேரிடமிருந்து ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 80 ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த நான்கு பேரிடமும் தீவிர விசாரணையும் அதிகாரிகள் மேற்கொண்டுவருகின்றனர்.