வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு ரூ.10 லட்சம் செலவில் நீர் தேக்க தொட்டி - எம்.எல்.ஏ கஸ்தூரி வாசு

கோவை: வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு ரூ.10 லட்சம் செலவில் நீர் தேக்க தொட்டி அமைக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு தெரிவித்துள்ளார்.

கோவை: வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு ரூ.10 லட்சம் செலவில் நீர் தேக்க தொட்டி அமைக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு தெரிவித்துள்ளார்.



கோவை மாவட்டம் வால்பாறையிலுள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் இன்று துவங்கி வரும் மார்ச் 6 வரை 7 நாட்கள் நடைபெறுகிறது. இதில் தூய்மை இந்தியா, உழவாரப்பணி, சாலை பாதுகாப்பு, கழிவறை பயன்பாடு, ஆளுமைத்திறன் உட்பட பல்வேறு கருத்தரங்கங்கள் பயிற்சிகள் நடைபெறுகின்றன. இதன் துவக்க விழா இன்று கல்லூரி கருத்தரங்கத்தில் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் முரளீதரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு கலந்து கொண்டார். நாட்டு நலப்பணி திட்ட முகாமை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். விழாவில் தலைமையுறையாற்றிய கல்லூரி முதல்வர், கல்லூரிக்கு அடிப்படை வசதியான நீர் தேக்க தொட்டியை அமைத்து தர நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தார்.



தொடர்ந்து பேசிய சட்டமன்ற உறுப்பினர், தனது தொகுதி நிதியிலிருந்து ரூ.10 லட்சம் செலவில் நீர் தேக்க தொட்டி அமைக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரிடம் பேசி மாணவர்கள் விடுதி கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், பேராசிரியர்களின் பிரச்சனைகளை உயர் கல்வித்துறை அமைச்சர் மற்றும் முதல்வரிடம் பேசி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இந்த விழாவில் முதல்வர், சட்டமன்ற உறுப்பினர், நாட்டு நலத்திட்ட அலுவலர்கள் முனைவர் பெரியசாமி, முனைவர் உமாமகேஸ்வரி, ரூபா, சங்கர் மற்றும் நான்கு அலகுகளைச்சேர்ந்த நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் 500 பேர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...