கோவை: இந்தியன் ரெட் கிராஸ் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவை வந்த இரு சக்கர வாகன பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவங்கி வைத்தார்.
கோவை: இந்தியன் ரெட் கிராஸ் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவை வந்த இரு சக்கர வாகன பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவங்கி வைத்தார்.
இந்தியன் ரெட்கிராஸ் அமைப்பு 1920ம் ஆண்டு தொடங்கி இந்த ஆண்டோடு 100 ஆண்டுகள் ஆகிறது. இதனையொட்டி இருசக்கர மோட்டர் பேரணியானது கடந்த 6ம் தேதி தூத்துக்குடியில் துவங்கியது. இந்த பேரணி ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் துவக்கி வைக்கப்பட்டு தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி,விருதுநகர், தேனி,திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் கடந்து வந்துள்ளது.

இந்த நிலையில், இன்று கோவை மாவட்டம் வந்தடைந்த இந்த இருசக்கர வாகன பேரணியை செஞ்சிலுவை கட்டிடம் முன்பு மாவட்ட ஆட்சியர் ராசாமணி, கோவை ரெட் கிராஸ் சேர்மன் நந்தினி ரங்கசாமி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இந்த பேரணி வரும் 11ம் தேதி சென்னையில் நிறைவடைகிறது. அங்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் பேரணி கொடி வழங்கப்பட உள்ளது. நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற பேரணியில் 175 வாகனங்களில் 350 யூத் ரெட் கிராஸ் அமைப்பாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கோவை ரெட் கிராஸ் துணைத் தலைவர் குமுதா பழனிச்சாமி மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தியன் ரெட்கிராஸ் அமைப்பு 1920ம் ஆண்டு தொடங்கி இந்த ஆண்டோடு 100 ஆண்டுகள் ஆகிறது. இதனையொட்டி இருசக்கர மோட்டர் பேரணியானது கடந்த 6ம் தேதி தூத்துக்குடியில் துவங்கியது. இந்த பேரணி ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் துவக்கி வைக்கப்பட்டு தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி,விருதுநகர், தேனி,திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் கடந்து வந்துள்ளது.

இந்த நிலையில், இன்று கோவை மாவட்டம் வந்தடைந்த இந்த இருசக்கர வாகன பேரணியை செஞ்சிலுவை கட்டிடம் முன்பு மாவட்ட ஆட்சியர் ராசாமணி, கோவை ரெட் கிராஸ் சேர்மன் நந்தினி ரங்கசாமி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இந்த பேரணி வரும் 11ம் தேதி சென்னையில் நிறைவடைகிறது. அங்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் பேரணி கொடி வழங்கப்பட உள்ளது. நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற பேரணியில் 175 வாகனங்களில் 350 யூத் ரெட் கிராஸ் அமைப்பாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கோவை ரெட் கிராஸ் துணைத் தலைவர் குமுதா பழனிச்சாமி மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.