கோவை: கோவையில் இருந்து பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல் வழியாக பெங்களூர் மற்றும் சென்னைக்கு ரயில்கள் இயக்க தமிழ்நாடு ஒய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் இருந்து பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல் வழியாக பெங்களூர் மற்றும் சென்னைக்கு ரயில்கள் இயக்க தமிழ்நாடு ஒய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி - போத்தனுர் தடத்தில் அகல ரயில் பாதை பணிகள் கடந்த 2017ம் முடிவடைந்து ரயில் போக்குவரத்து துவங்கியது. அதனை தொடர்ந்து பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. ஆனால், மீட்டர் கேஜ் பாதையாக இருந்த போது இயக்கப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்கப்படவில்லை. இது தொடர்பாக பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்தும் கூடுதல் ரயில்கள் இயக்க ரயில்வே வாரியம் சுணக்கம் காட்டி வருகின்றது.
சமீபத்தில் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ரயில்வே அமைச்சர், கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக மதுரைக்கு ரயில்கள் இயக்க தற்போது திட்டம் எதுவும் இல்லை என்று கூறியிருந்தார். இந்த நிலையில், தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் கழகம் தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
அதில் கோவையில் இருந்து பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை விழுப்புரம், வழியாக சென்மைச்கு இரவ நேர ரயில் இயக்கவும், பொள்ளாச்சியில் இருந்து பழனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம் வழியாக பெங்களூருக்கு ரயில் இயக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பொள்ளாச்சியில் இருந்து கோவை வழியாக பெங்களூருக்கு ரயில் இயக்கவும் அதில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி - போத்தனுர் தடத்தில் அகல ரயில் பாதை பணிகள் கடந்த 2017ம் முடிவடைந்து ரயில் போக்குவரத்து துவங்கியது. அதனை தொடர்ந்து பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. ஆனால், மீட்டர் கேஜ் பாதையாக இருந்த போது இயக்கப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்கப்படவில்லை. இது தொடர்பாக பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்தும் கூடுதல் ரயில்கள் இயக்க ரயில்வே வாரியம் சுணக்கம் காட்டி வருகின்றது.
சமீபத்தில் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ரயில்வே அமைச்சர், கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக மதுரைக்கு ரயில்கள் இயக்க தற்போது திட்டம் எதுவும் இல்லை என்று கூறியிருந்தார். இந்த நிலையில், தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் கழகம் தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
அதில் கோவையில் இருந்து பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை விழுப்புரம், வழியாக சென்மைச்கு இரவ நேர ரயில் இயக்கவும், பொள்ளாச்சியில் இருந்து பழனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம் வழியாக பெங்களூருக்கு ரயில் இயக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பொள்ளாச்சியில் இருந்து கோவை வழியாக பெங்களூருக்கு ரயில் இயக்கவும் அதில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.