குடியுரிமை சட்ட திருத்த ஆதரவு என்ற பெயரில் வன்முறை ஏற்படுத்தும் இந்து முன்னணி போராட்டத்திற்கு அனைத்துக் கட்சி கூட்டத்தில் கண்டன தீர்மானம் - சுப்பராயன் எம்.பி

திருப்பூர்: திருப்பூரில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவு என்ற பெயரில் வன்முறையை ஏற்படுத்தும் வகையில் இந்து முன்னணியின் தொடர் போராட்டத்திற்கு அனைத்துக் கட்சி கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் தெரிவித்தார்.

திருப்பூர்: திருப்பூரில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவு என்ற பெயரில் வன்முறையை ஏற்படுத்தும் வகையில் இந்து முன்னணியின் தொடர் போராட்டத்திற்கு அனைத்துக் கட்சி கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் தெரிவித்தார்.

இந்தியா முழுவதும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாகவும் எதிராகவும் போராட்டங்கள் நடைபெற்று வரும் சூழ்நிலையில், திருப்பூரில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் அனைத்து கட்சி கூட்டம் இன்று திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், டெல்லியை போல தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்து முன்னணி திருப்பூர் புஷ்பா ரவுண்டானா பகுதியில் பள்ளியை ஆக்கிரமித்து, பெரிய பந்தல்கள் அமைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், உலக அளவில் பின்னலாடை வர்த்தகத்தில் சிறந்து விளங்கும் திருப்பூரில் வன்முறைகள் நிகழ்ந்தால் மிகப்பெரிய இழப்புகள் ஏற்படும் என்பதால் முன்கூட்டியே மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும், திருப்பூரை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடத்திலும் மனு அளிப்பதாக தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும் கலந்து கொண்டன.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...