கோவை: கோவை சிங்காநல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் தனியார் பேருந்தில் பயணித்து வந்த கல்லூரி மாணவர் பேருந்திலிருந்து இறங்கி பேருந்தின் பின்புறத்தில் கல் வீசிய சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி சமூக வளைதளத்தில் பரவி வருகிறது.
கோவை: கோவை சிங்காநல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் தனியார் பேருந்தில் பயணித்து வந்த கல்லூரி மாணவர் பேருந்திலிருந்து இறங்கி பேருந்தின் பின்புறத்தில் கல் வீசிய சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி சமூக வளைதளத்தில் பரவி வருகிறது.
திருப்பூரில் இருந்து என்.ஆர்.டி என்ற தனியார் பேருந்து நேற்று மாலை கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, சூலூர் ஆர்விஎஸ் பேருந்து நிறுத்தத்தில் ஆர்விஎஸ் கல்லூரியின் மாணவர் தினேஷ்(22) என்பவர் பேருந்தில் ஏறியுள்ளார். பின்னர் கல்லூரி மாணவருக்கும் பேருந்து நடத்துநருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த கல்லூரி மாணவர் ஒண்டிபுதூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சாலையின் ஓரத்தில் கிடந்த கல்லை எடுத்து பேருந்தின் பின்புறத்தில் அடித்து தப்பியோடினார். இதில் பேருந்தின் பின்புற கண்ணாடி சுக்குநூறாக உடைந்தது.
இதையடுத்து பேருந்தின் நடத்துநரும் ஓட்டுநரும் கல்லூரி மாணவரை பிடிக்க முற்பட்டனர். ஆனால், அவர் தப்பியோடவே பேருந்தின் நடத்துநர் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து சிங்காநல்லூர் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சுபாஷை கைது செய்தனர். இந்நிலையில், கல்லூரி மாணவர் பேருந்தின் மீது கல்வீசும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.