கோவை: வால்பாறையில் வன விலங்குகள் அதிகம் உள்ள நிலையில், ஆண்டு தேர்விற்காக தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு நடத்தப்படும் சிறப்பு வகுப்புகளை விரைந்து முடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: வால்பாறையில் வன விலங்குகள் அதிகம் உள்ள நிலையில், ஆண்டு தேர்விற்காக தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு நடத்தப்படும் சிறப்பு வகுப்புகளை விரைந்து முடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் ஆண்டுத்தேர்விற்கு மாணவிகளை தயார்படுத்த தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் காலை 8 மணிக்கு துவங்கி 9 மணி வரை நடைபெறுகிறது.
வால்பாறையின் பல்வேறு தேயிலை தோட்டப்பகுதிகளிலிருந்து இதற்காக இவர்கள் காலை 6 மணிக்கெல்லாம் தயாராகி பேருந்தில் ஏறி 30 கிலோமீட்டர் வரை பயணம் செய்து வால்பாறை வந்து சேருகின்றனர்.

வால்பாறை புதிய பேருந்து நிலையத்திலிருந்து பள்ளி வரை சுமார் ஒன்னறை கிலோமீட்டர் வரை நடந்து பள்ளிக்கு செல்கிறார்கள். மாலை சிறப்பு வகுப்பு 6 மணிக்கு முடிந்த பின்னர் 7 மணிக்கு பேருந்தில் ஏறி வீடு திரும்பும் போது இரவு மனி 8 அல்லது 9 மணியை தாண்டுகிறது.
வன விலங்குகள் அதிகம் உள்ள பகுதியானதால் மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் குழந்தைகள் வீடு திரும்பும் வரை மன அச்சமடைந்துள்ளனர். ஆகவே, சிறப்பு வகுப்புகளை விரைவில் முடித்து மாணவிகள் விரைவாக வீடு திரும்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் காலையில் மாணவர்களை புதிய பேருந்து நிலையத்தில் இறக்கி விடுவதை தவிர்த்து, காந்தி சிலை வளாகத்தில் இறக்கி விட அரசுப் போக்குவரத்து கழக நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.