கோவை: கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் பெண் துப்புரவு தொழிலாளிக்கு பாலியல் தொல்லை அளித்த துப்புரவு தொழிலாளர் சங்க தலைவர் ஜோதியை பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை: கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் பெண் துப்புரவு தொழிலாளிக்கு பாலியல் தொல்லை அளித்த துப்புரவு தொழிலாளர் சங்க தலைவர் ஜோதியை பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை வரதராஜபுரத்தில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 50 க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் துப்புரவு தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மருத்துவமனையில் பணிபுரியும் 32 வயதான பெண் தொழிலாளி வழக்கம் போல கழிவறை சுத்தம் செய்யும் பணியினை மேற்கொண்டுள்ளார்.. அப்போது அதே மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் சக ஊழியரும், துப்புரவு தொழிலாளர் சங்க தலைவருமான ஜோதி, பெண் தொழிலாளி சுத்தம் செய்து வரும் கழிவறைக்குள் சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த பெண் சத்தமிட்டு அலறிய சத்தம் கேட்டு வந்தவர்கள் ஜோதியினை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிப்புக்குள்ளாகிய பெண், சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்துள்ளார். புகாரின் பேரில் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் கொலை முயற்சி, கொடும் காயம் ஏற்படுத்துதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஜோதியை போலீசார் கைது செய்தனர்.
ஏற்கனவே இஎஸ்ஐ மருத்துவமனையில் உள்ள துப்புரவு தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. இந்த சூழலில் தற்போது பெண் துப்புரவு தொழிலாளியை தொழிற்சங்க தலைவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தொழிலாளர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை வரதராஜபுரத்தில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 50 க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் துப்புரவு தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மருத்துவமனையில் பணிபுரியும் 32 வயதான பெண் தொழிலாளி வழக்கம் போல கழிவறை சுத்தம் செய்யும் பணியினை மேற்கொண்டுள்ளார்.. அப்போது அதே மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் சக ஊழியரும், துப்புரவு தொழிலாளர் சங்க தலைவருமான ஜோதி, பெண் தொழிலாளி சுத்தம் செய்து வரும் கழிவறைக்குள் சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த பெண் சத்தமிட்டு அலறிய சத்தம் கேட்டு வந்தவர்கள் ஜோதியினை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிப்புக்குள்ளாகிய பெண், சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்துள்ளார். புகாரின் பேரில் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் கொலை முயற்சி, கொடும் காயம் ஏற்படுத்துதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஜோதியை போலீசார் கைது செய்தனர்.
ஏற்கனவே இஎஸ்ஐ மருத்துவமனையில் உள்ள துப்புரவு தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. இந்த சூழலில் தற்போது பெண் துப்புரவு தொழிலாளியை தொழிற்சங்க தலைவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தொழிலாளர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.