திருப்பூர்: தமிழகத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா ட்விட்டர் பதிவுகள் மூலம் கலவரங்களை ஏற்படுத்த முயற்சி செய்வதாகவும், இதனை முன்கூட்டியே அரசு தடுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
திருப்பூர்: தமிழகத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா ட்விட்டர் பதிவுகள் மூலம் கலவரங்களை ஏற்படுத்த முயற்சி செய்வதாகவும், இதனை முன்கூட்டியே அரசு தடுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாஜகவின் எச்.ராஜா மற்றும் கல்யாணராமன் ட்விட்டர் மூலம் மதக்கலவரங்களை ஏற்படுத்த முயற்சி செய்து வருவதாகவும் தமிழகத்தில் கலவரங்கள் நிகழ்ந்தால் அதற்கு முழுக்காரணம் எச்.ராஜா மற்றும் கல்யாணராமனுமே காரணம் எனவும் அவர்கள் மீது தமிழக அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
டெல்லியில் பாஜக தலைவர் கபில் மிஸ்ரா டிவிட்டருக்கு பிறகுதான் வன்முறை நிகழ்ந்தது. அது தமிழகத்தில் நிகழாமல் இருக்க முன்கூட்டியே காவல்துறை விழிப்புடன் செயல்பட வேண்டும் என கூறிய அவர், மத்திய அரசின் கருப்பு சட்டங்களான குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறும் வரை அனைத்து ஜனநாயக அமைப்புகளுடனும் அறவழியில் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று கூறினார்.
மேலும், மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வருகின்ற பிப்ரவரி 29ம் தேதி கோவையில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது இதில் ஜனநாயக அமைப்பின் தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்கின்றனர் என தமிமுன் அன்சாரி தெரிவித்தார்.
திருப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாஜகவின் எச்.ராஜா மற்றும் கல்யாணராமன் ட்விட்டர் மூலம் மதக்கலவரங்களை ஏற்படுத்த முயற்சி செய்து வருவதாகவும் தமிழகத்தில் கலவரங்கள் நிகழ்ந்தால் அதற்கு முழுக்காரணம் எச்.ராஜா மற்றும் கல்யாணராமனுமே காரணம் எனவும் அவர்கள் மீது தமிழக அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
டெல்லியில் பாஜக தலைவர் கபில் மிஸ்ரா டிவிட்டருக்கு பிறகுதான் வன்முறை நிகழ்ந்தது. அது தமிழகத்தில் நிகழாமல் இருக்க முன்கூட்டியே காவல்துறை விழிப்புடன் செயல்பட வேண்டும் என கூறிய அவர், மத்திய அரசின் கருப்பு சட்டங்களான குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறும் வரை அனைத்து ஜனநாயக அமைப்புகளுடனும் அறவழியில் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று கூறினார்.
மேலும், மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வருகின்ற பிப்ரவரி 29ம் தேதி கோவையில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது இதில் ஜனநாயக அமைப்பின் தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்கின்றனர் என தமிமுன் அன்சாரி தெரிவித்தார்.