கோவை: கோவையில் இஸ்லாமியர் குடியிருப்பு பகுதிகளில் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 4 பேர் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுபட்டதாக கருதப்பட்டு பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை: கோவையில் இஸ்லாமியர் குடியிருப்பு பகுதிகளில் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 4 பேர் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுபட்டதாக கருதப்பட்டு பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாடு முழுவதும் குடியுரிமை சட்டத் திருத்தம், என்.ஆர்.சி, என்.பி.ஆர் போன்ற சட்டதிட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேசிய குடியுரிமை பதிவேடு இஸ்லாமியர்களுக்கு எதிரானது எனவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கோவை உக்கடம், கோட்டைமேடு உள்ளிட்ட இஸ்லாமிய குடியிருப்புகளில் ஆதார் கார்டுகள், பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆதாரங்களை 4 இளைஞர்கள் சேகரித்து வருவதாக பரபரப்பு ஏற்பட்டது. முதலில் மக்கள் தொகை கணக்கெடுப்பு என அப்பகுதியில் உள்ள மக்களிடம் தகவல் பரவியது.

இதைதொடர்ந்து அப்பகுதிக்கு வந்த ஜமாத் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் அந்த கணக்கெடுப்பில் ஈடுபட்ட இளைஞர்களை சிறைபிடித்தனர். அதேபோல, இந்த கணக்கெடுப்பில் ஈடுபட்ட இளைஞர்கள் ஜமாத் அமைப்பினரிடம் முன்னுக்கு பின் முரணாக பல்வேறு பதில்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சந்தேகமடைந்த ஜமாத் அமைப்பினர், உக்கடம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து இளைஞர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், அவர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் வில்சன் கேர் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும் அந்த நிறுவனம் நோய் தடுப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மருந்துகளை தயாரிக்கும் நிறுவனம் என்பதும் இதுதொடர்பான பொருட்களை சந்தைப்படுத்த பொதுமக்களை சந்தித்து கணக்கெடுப்பு எடுத்ததாகவும் தெரியவந்தது.