கோவை: பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நாளை குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நடைபெற உள்ள பேரணியில் வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகளை காவல்துறை செய்து தரக்கோரி எஸ்டிபிஐ கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
கோவை: பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நாளை குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நடைபெற உள்ள பேரணியில் வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகளை காவல்துறை செய்து தரக்கோரி எஸ்டிபிஐ கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் ஜமாத்தினர் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல, கோவை மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆத்துப்பாலம் பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், குடியுரிமை சட்ட எதிர்ப்பாளர்களை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபடும் முஸ்லிம் அமைப்புகள் மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாளை பேரணி மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் புகார் அளிக்கப்பட உள்ளது.
இதனிடையே நாளை நடைபெற உள்ள பேரணியில் இஸ்லாமியர்களின் வணிக நிறுவனங்கள், சொத்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது எனவும் ஏற்கனவே டெல்லியில் அமைதிப் பேரணியில் பெரும் கலவரங்கள் ஏற்பட்டுள்ளது எனவும் ஆகவே, கோவை மாநகர காவல் ஆணையாளர் அனைவருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் ஜமாத்தினர் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல, கோவை மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆத்துப்பாலம் பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், குடியுரிமை சட்ட எதிர்ப்பாளர்களை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபடும் முஸ்லிம் அமைப்புகள் மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாளை பேரணி மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் புகார் அளிக்கப்பட உள்ளது.
இதனிடையே நாளை நடைபெற உள்ள பேரணியில் இஸ்லாமியர்களின் வணிக நிறுவனங்கள், சொத்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது எனவும் ஏற்கனவே டெல்லியில் அமைதிப் பேரணியில் பெரும் கலவரங்கள் ஏற்பட்டுள்ளது எனவும் ஆகவே, கோவை மாநகர காவல் ஆணையாளர் அனைவருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.