கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தகவல் உரிமை சட்ட விழிப்புணர்வு குறித்து அனைத்து துறை அரசு அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்ட விழிப்புணர்வு முகாமில் தகவல் பெறும் உரிமை சட்டப் பிரிவுகள் சம்மந்தப்பட்ட விரிவான விளக்கத்தினை ஆணையர் அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது.
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தகவல் உரிமை சட்ட விழிப்புணர்வு குறித்து அனைத்து துறை அரசு அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்ட விழிப்புணர்வு முகாமில் தகவல் பெறும் உரிமை சட்டப் பிரிவுகள் சம்மந்தப்பட்ட விரிவான விளக்கத்தினை ஆணையர் அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது,
தமிழ்நாடு தகவல் ஆணையர் முனைவர்.ஆர்.பிரதாப்குமார் அவர்களால் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமில் 50 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. விசாரணையின் போது உரிய தகவல்கள் வழங்காத பொதுத் தகவல் அலுவலர்கள் மீது தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005 பிரிவு 20(1)ன் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கான உரிய விளக்கம் கோரப்பட்டது.
மேலும், தகவல் உரிமை சட்ட விழிப்புணர்வு குறித்து அனைத்து துறை அரசு அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு முகாமில் தகவல் பெறும் உரிமை சட்டப் பிரிவுகள் சம்மந்தப்பட்ட விரிவான விளக்கத்தினை ஆணையர் அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது. மேலும், மேற்படி சட்டப்பிரிவுகள் சம்பந்தமான கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் எழுப்பிய பொதுத் தகவல் அலுவலர்களுக்கும் உரிய பதில், தெளிவுரைகள் தொடர்புடைய குறிப்புகள் ஆணையர் அவர்களால் வழங்கப்பட்டது என மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது,
தமிழ்நாடு தகவல் ஆணையர் முனைவர்.ஆர்.பிரதாப்குமார் அவர்களால் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமில் 50 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. விசாரணையின் போது உரிய தகவல்கள் வழங்காத பொதுத் தகவல் அலுவலர்கள் மீது தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005 பிரிவு 20(1)ன் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கான உரிய விளக்கம் கோரப்பட்டது.
மேலும், தகவல் உரிமை சட்ட விழிப்புணர்வு குறித்து அனைத்து துறை அரசு அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு முகாமில் தகவல் பெறும் உரிமை சட்டப் பிரிவுகள் சம்மந்தப்பட்ட விரிவான விளக்கத்தினை ஆணையர் அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது. மேலும், மேற்படி சட்டப்பிரிவுகள் சம்பந்தமான கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் எழுப்பிய பொதுத் தகவல் அலுவலர்களுக்கும் உரிய பதில், தெளிவுரைகள் தொடர்புடைய குறிப்புகள் ஆணையர் அவர்களால் வழங்கப்பட்டது என மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.