கோவையில் வரும் 29ம் தேதி தமிழ் மொழியை ஆட்சி மொழியாக நடைமுறைப்படுத்த கோரி உண்ணாநிலை போராட்டம் - பேரூராதீனம் மருதாசல அடிகளார்

கோவை: தமிழ்நாட்டில் தமிழ் மொழியை ஆட்சி மற்றும் வழிபாட்டு மொழியாக நடைமுறைப்படுத்த கோரி கோவையில் வருகின்ற 29ம் தேதி உண்ணாநிலை போராட்டம் நடத்த உள்ளதாக பேரூராதீனம் மருதாசல அடிகளார் தெரிவித்துள்ளார்.


கோவை: தமிழ்நாட்டில் தமிழ் மொழியை ஆட்சி மற்றும் வழிபாட்டு மொழியாக நடைமுறைப்படுத்த கோரி கோவையில் வருகின்ற 29ம் தேதி உண்ணாநிலை போராட்டம் நடத்த உள்ளதாக பேரூராதீனம் மருதாசல அடிகளார் தெரிவித்துள்ளார்.



கோவை ஆடிஸ் வீதியில் உள்ள கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தொடக்க நிலையில் இருந்து கல்லூரி கல்விகளில் தமிழ் வழிக்கல்வியை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

குறிப்பாக, அனைத்து கோவில்களிலும் குட முழுக்கு, வழிபாடுகளில் தமிழையே பயன்படுத்த வேண்டும் எனவும், தமிழே ஆட்சி மொழி என்பதை தமிழக அரசு அனைத்து துறைகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கூறிய அவர், தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு 80 சதவீத வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரினார். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மொழிக்காப்புக் கூட்டியக்கம் சார்பில் வருகின்ற 29ம் தேதி கோவை சிவானந்தா காலணி பகுதியில் ஒருநாள் உண்ணா நிலைப் போராட்டம் நடைபெற உள்ளது எனவும் இதில் 60க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்பினரும்,தமிழ் ஆர்வலர்களும் பங்கேற்க உள்ளனர் எனவும் அவர் கூறினார்.

இதனையடுத்து பேசிய தமிழ்மொழிக்காப்பு கூட்டியக்கத்தின் தலைவர் அப்பாவு பேசுகையில், தற்போதைய சூழலில் குழந்தைகள் நாவில் கூட தமிழ் இல்லை எனவும் அழிந்து போகும் நிலையில் தமிழ் உள்ளதாக தெரிவித்த அவர், தமிழ் மொழி காப்பாற்றப் பட வேண்டும் என்ற நோக்கில் இந்த கூட்டியக்கம் துவங்கப்பட்டு உள்ளதாகவும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார். இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேராசிரியர் சிற்பி, புலவர்கள் இரவீந்திரன், கணேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...