கோவையில் பாதாள சாக்கடை இணைப்பு திட்டப்பணிகளை துரிதமாக முடிக்க மாநகராட்சி ஆணையர் உத்தரவு

கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மண்டல அலுவலகக் கூட்டரங்கில், குடிநீர் விநியோகம் மற்றும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள்‌ குறித்த ஆய்வுக்கூட்டம் மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலர்‌ திரு.ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ தலைமையில் நடைபெற்றது.

கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மண்டல அலுவலகக் கூட்டரங்கில், குடிநீர் விநியோகம் மற்றும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள்‌ குறித்த ஆய்வுக்கூட்டம் மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலர்‌ திரு.ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் பணிகள் எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. குறிப்பாக மாநகராட்சியில்‌ குறிச்சி, குனியமுத்தூரில்‌ நடைபெற்று வரும்‌ பாதாள சாக்கடை இணைப்பு திட்டப்பணிகளையும்‌, மற்றும்‌ மாநகராட்சியுடன்‌ புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில்‌ நடைபெற்றுவரும்‌ குடிநீர் குழாய்‌ இணைப்பு பணிகளையும்‌ துரிதமாகவும்‌, தரமானதாகவும்‌ முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 

மேலும் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கும்‌ பணிகளையும்‌, சாலைகளை செப்பணிடும் பணிகளின் போது போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல்‌ உடனுடக்குடன்‌ மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சி சுகாதாரப்பணியாளர்கள் தொய்வின்றி தூய்மைப்‌ பணிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும்‌ சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலர்‌ திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத்‌ ஆகியோர் ஆய்வுக்கூட்டத்தின் போது அறிவுறுத்தினார்கள்‌.



ஆய்வுக்கூட்டத்தினை தொடர்ந்து,கோயம்புத்தூர்‌ மாநகராட்சி, தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட கோவைப்புதூர்‌ பகுதியில்‌ பாதாள சாக்கடை இணைப்பு குழாய்‌ பதிப்பு பணிகள்‌ நடைபெறுவதையும்‌ மற்றும்‌ நுண்ணுயிர்‌ உரம்‌ தயாரிக்கும்‌ மையத்தின்‌ பணிகளையும்‌ நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.



Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...