நாங்கள் என்ன நலத்திட்டங்களை செய்தாலும் அதனை குறை கூறும் மனநிலையில் இருக்கிறார் மு.க ஸ்டாலின் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை: கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவின் போது உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


கோவை: கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவின் போது உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், அம்மாவின் பிறந்த நாள் விழா அவர்கள் இருக்கும்போது எப்படி கொண்டாடினோமோ அதே போல தான் எத்தகைய மாற்றம் இல்லாமல் இன்றும் கொண்டாடி வருவதாக தெரிவித்தார். மேலும் மக்களுக்கு நன்மையளிக்கும் வகையில் காவிரி வேளாண்மண்டலம் போன்ற திட்டங்களை அம்மா நினைத்தது போல் எடப்பாடி பழனிச்சாமி அரசு செய்து வருவதாக கூறினார். 

மேலும் தற்போது இஸ்லாமிய மக்களை போராட்டத்திற்கு தூண்டிவிட்டு அதன் மூலம் திமுக கட்சியினர் குளிர் காய பார்க்கிறார்கள். இத்தகைய செயல் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டது என்பதனை உணர்த்துகிறது. மேலும் தற்போது கட்ட பஞ்சாயத்து, நில அபகரிப்பு போன்றவை இல்லாமல் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. சட்டம் ஒழுங்கினை காப்பதில் அதிமுக அரசு முனைப்போடு செயல்பட்டு வருவதாக கூறிய அவர், .ஆனால் திமுக ஆட்சியில் அப்படியா இருந்தது ? என கேள்வி எழுப்பினார்.

நிகழ்ச்சிக்கு பின்பாக கோவை அரசு மருத்துமனைக்கு சென்ற அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஜெயலலிதா பிறந்த தினமான நேற்று பிறந்த குழந்தைகளுக்கு 13 மோதிரம் மற்றும் 6 தங்க சங்கிலியை வழங்கினார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...