கோவை: டெல்லியில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி பல்லாயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில், நேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஆர்எஸ்எஸ் அமைப்பினர் துப்பாக்கியோடு கலவரத்தில் ஈடுபட்டனர்.
கோவை: டெல்லியில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி பல்லாயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில், நேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஆர்எஸ்எஸ் அமைப்பினர் துப்பாக்கியோடு கலவரத்தில் ஈடுபட்டனர்.

அவர்களைத் தடுக்காமல் அங்கிருந்த போலீசார் அமைதியாக இருந்தமைக்கும் போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் கோவையில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினைச்சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டோர் குனியமுத்தூரில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசிற்கு எதிரான கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாவட்ட தலைவர் அபுதாஹீர், ஆர்எஸ்எஸ் அமைப்பை சார்ந்த சில குண்டர்கள் உள்ளே நுழைந்து துப்பாக்கி சூடு நடத்தி போராட்டத்தை அமைதியான முறையில் நடத்தவிடாமல் தடுத்தனர் எனவும், இந்து முஸ்லிம் மக்களிடையே மதரீதியான பிரச்சனையை தூண்டி விடவே இதுபோன்ற துப்பாக்கி சூடு நடத்துவதாகவும் குற்றம் சாட்டினார். இதற்கு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று இல்லை என்றால் மத்திய அரசின் அலுவலகங்கள் அனைத்தையும் முற்றுகையிட உள்ளதாகவும் கூறினார்.