திருப்பூர்: திருப்பூரில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட முயன்ற தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் 80க்கும் மேற்பட்டவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர்: திருப்பூரில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட முயன்ற தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் 80க்கும் மேற்பட்டவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ரயில் மறியல் போராட்டமானது இன்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரின் தடுப்புகளை தாண்டி ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனையடுத்து போராட்டக்காரர்கள் திருப்பூர் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டதோடு, டவுன்ஹால் மேம்பாலம் பகுதியில் மறியலில் ஈடுபட முயன்றனர்.

இதையடுத்து மறியலில் ஈடுபட முயன்ற 80க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ரயில் மறியல் போராட்டமானது இன்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரின் தடுப்புகளை தாண்டி ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனையடுத்து போராட்டக்காரர்கள் திருப்பூர் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டதோடு, டவுன்ஹால் மேம்பாலம் பகுதியில் மறியலில் ஈடுபட முயன்றனர்.

இதையடுத்து மறியலில் ஈடுபட முயன்ற 80க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.