கோவையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக 7வது நாளாக போராட்டம்; சட்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என அறிவிப்பு

கோவை: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில் கோவை ஆத்துபாலத்தில் 6 வது நாளாக நள்ளிரவிலும் தொடர்ந்த போராட்டம் ஏழாவது நாளாக இன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


கோவை: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில் கோவை ஆத்துபாலத்தில் 6 வது நாளாக நள்ளிரவிலும் தொடர்ந்த போராட்டம் ஏழாவது நாளாக இன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பலர் கலந்து கொண்டு இரவு பகல் பாராமல் நடத்திவரும் போராட்டத்திற்கு அரசு செவிசாய்க்கவில்லை என்பது அவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.



மேலும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர் போன்ற சட்டங்கள் இஸ்லாமியர்களை மட்டுமல்லாமல் பிற மதத்தினரையும் பாதிக்ககூடியதாக உள்ளது. எனவே இந்தச் சட்டங்களை திரும்ப பெறும் வரை எங்களின் போராட்டம் தொடரும் என தெரிவிக்கின்றனர்.

இந்த சூழலில் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் முன்னாள் வக்பு வாரிய தலைவர் ஹைதர் அலி போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழக அரசு சட்டமன்றத்தில் சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., மற்றும் என்.ஆர்.சி., போன்ற சட்டங்களை திரும்ப வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதேபோல மக்கள் தொகை கணக்கெடுப்பில் இத்தனை ஆண்டுகள் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எதிராக எந்த புதிய கேள்விகளையும் கேட்க அனுமதிக்க மாட்டோம். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தான் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதை அரசு புரிந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...